பக்கம் எண் :

கடல் தாவு படலம்53

 

நீள்வாய்விசும்பும் தனதுச்சி
     நெருக்க நின்றாள்.
 

(அந்தச் சுரசை)

     பேழ்வாய்அரக்கி உருக்கொடு - பெரிய வாயை உடையஅரக்கி
வடிவத்தை ஏற்று; பெட்பின் ஓங்கி - (மனித) ஆசைபோல் வளர்ந்து;
கோள்வாய் அரியின் - வலிமை மிக்க குரங்கின்;  குலத்தாய் - குலத்தில்
பிறந்தவனே; கொடுங்கூற்றும் உட்க - கொடுமையான யமனும் அஞ்சும்படி;
வாழ்வாய் -
வாழ்வாயாக; எனக்கு ஆமிடமாய் வருவாய் என்னா -
எனக்கு (உண்ணும்) மாமிசமாக வருவாயாக என்று; நீள்வாய் விசும்பும்  -
ஓங்கிய இடத்தைப் பெற்ற ஆகாயமும்; தனது உச்சி - தனது தலையை;
நெருக்க நின்றாள் - அணுகி நெருக்கும்படி (வளர்ந்து) நின்றாள்.

     சுரசை அரக்கிஉருவத்துடன் குரங்கு மரபில் வந்தவனே எனக்கு
உணவாய் வருவாயாக என்று கூறி நின்றாள். பேழ்வாய் - பெரியவாய் /
பிளந்த வாய் என்றும் கூறலாம். ஆமிடம் - உண்ணும் மாமிசம். யான் இனி
இதனுக்கு ஆமிடம். (கம்ப - 3664).                          (66)

4807.

தீயேஎனல்ஆய பசிப்பிணி
     தீர்த்தல்செய்தாய்
ஆயே விரைவுற்றெனை அண்மினை
     வண்மை யாள!
நீயே இனிவந்துஎன் நிணம்கொள்
     பிணங்குஎயிற்றின்
வாயே புகுவாய்; வழிமற்றிலை
     வானின் என்றாள்.

(சுரசை அனுமனைநோக்கி)

     வண்மையாள! -கொடைப் பண்புடையவனே; தீயே எனல் ஆய -
நெருப்பே என்று கூறத்தக்க; பசிப்பிணி - பசியாகிய நோயை; தீர்த்தல்
செய்வாய் ஆயே -
  நீக்குதலைச் செய்பவனாக ஆகி; விரைவுற்று எனை
அண்மினை -
விரைவாக என்னைச் சார்ந்தாய்; இனி - இப்போது; நீயே
வந்து -
நீயாக வந்து; என் நிணங்கொள் பிணங்கு - எனது கொழுப்பைக்
கொண்ட ஒன்றோடொன்று பினனியிருக்கும்; எயிற்றின் வாயே - கோரைப்
பற்களையுடைய