| | நீள்வாய்விசும்பும் தனதுச்சி நெருக்க நின்றாள். |
(அந்தச் சுரசை) பேழ்வாய்அரக்கி உருக்கொடு - பெரிய வாயை உடையஅரக்கி வடிவத்தை ஏற்று; பெட்பின் ஓங்கி - (மனித) ஆசைபோல் வளர்ந்து; கோள்வாய் அரியின் - வலிமை மிக்க குரங்கின்; குலத்தாய் - குலத்தில் பிறந்தவனே; கொடுங்கூற்றும் உட்க - கொடுமையான யமனும் அஞ்சும்படி; வாழ்வாய் - வாழ்வாயாக; எனக்கு ஆமிடமாய் வருவாய் என்னா - எனக்கு (உண்ணும்) மாமிசமாக வருவாயாக என்று; நீள்வாய் விசும்பும் - ஓங்கிய இடத்தைப் பெற்ற ஆகாயமும்; தனது உச்சி - தனது தலையை; நெருக்க நின்றாள் - அணுகி நெருக்கும்படி (வளர்ந்து) நின்றாள். சுரசை அரக்கிஉருவத்துடன் குரங்கு மரபில் வந்தவனே எனக்கு உணவாய் வருவாயாக என்று கூறி நின்றாள். பேழ்வாய் - பெரியவாய் / பிளந்த வாய் என்றும் கூறலாம். ஆமிடம் - உண்ணும் மாமிசம். யான் இனி இதனுக்கு ஆமிடம். (கம்ப - 3664). (66) | 4807. | தீயேஎனல்ஆய பசிப்பிணி தீர்த்தல்செய்தாய் ஆயே விரைவுற்றெனை அண்மினை வண்மை யாள! நீயே இனிவந்துஎன் நிணம்கொள் பிணங்குஎயிற்றின் வாயே புகுவாய்; வழிமற்றிலை வானின் என்றாள். |
(சுரசை அனுமனைநோக்கி) வண்மையாள! -கொடைப் பண்புடையவனே; தீயே எனல் ஆய - நெருப்பே என்று கூறத்தக்க; பசிப்பிணி - பசியாகிய நோயை; தீர்த்தல் செய்வாய் ஆயே - நீக்குதலைச் செய்பவனாக ஆகி; விரைவுற்று எனை அண்மினை - விரைவாக என்னைச் சார்ந்தாய்; இனி - இப்போது; நீயே வந்து - நீயாக வந்து; என் நிணங்கொள் பிணங்கு - எனது கொழுப்பைக் கொண்ட ஒன்றோடொன்று பினனியிருக்கும்; எயிற்றின் வாயே - கோரைப் பற்களையுடைய |