பக்கம் எண் :

532சுந்தர காண்டம்

பட்டனர் - மற்றும் சிலர்,இடிக்கப்பட்டு இறந்தனர்; சிலர் வேர்க்க பட்டனர்-
சிலர், அவ்விடம் விட்டுப் பெயர்த்து எறியப்பட்டு இறந்தனர்;
சிலர் பிடிஉண்டு பட்டார் - வேறு சிலர் அனுமனால் பிடிக்கப்பட்டு
இறந்தனர்; சிலர்ஆர்க்க பட்டனர் - இன்னும் சிலர் கட்டப்பட்டு இறந்தனர்;
சிலர் அடிஉண்டு பட்டார் - மற்றுஞ் சிலர், அனுமனால் அடிக்கப்பட்டு
இறந்தனர்;சிலர் பார்க்க பட்டனர் - வேறு சிலர், அனுமன் கோபித்துப்
பார்த்ததாலேஇறந்தனர்; சிலர் பயமுண்டு பட்டனர் - வேறு சிலர் பயந்து
இறந்தனர்.

     ஆர்த்தல் -கட்டுதல்; ‘ஆர்த்த கணவன் அகன்றான்’ (சிலப் - 9; 37)
                                                          (35)

5524.

ஓடிக்கொன்றனன் சிலவரை; உடல் உடல்தோறும்
கூடிக் கொன்றனன்சிலவரை; கொடி நெடு மரத்தால்
சாடிக்கொன்றனன் சிலவரை; பிணம்தொறும் தடவித்
தேடிக்கொன்றனன் சிலவரை-கறங்கு எனத்
                                  திரிவான்.

     கறங்கு எனத்திரிவான் - காற்றாடி போன்றுதிரிபவனான அனுமன்;
சிலவரை உடல் உடல் தோறும் ஓடிக் கொன்றனன் - சில அரக்கர்களை,
ஒவ்வொருவர் இருக்கும் இடத்திலும் ஓடிப் போய், கொன்றான்; சிலவரை கூடி
கொன்றனன் -
சிலரை, நெருங்கிக் கொன்றான்; சிலவரை கொடி
நெடுமரத்தால் சாடிக் கொன்றனன் -
சிலரை, கொடிகள் படர்ந்த பெரிய
மரத்தினால் அடித்துக் கொன்றான்; பிணந் தொறும் தடவி சிலரைத் தேடித்
கொன்றனன் -
பிணக்குவியல்களிடையே பதுங்கிக் கிடந்த சிலரை தேடிக்
கண்டுபிடித்துக் கொன்றான்.                                   (36)

5525.

முட்டினார்பட, முட்டினான்; முறை முறை முடுகிக்
கிட்டினார் பட,கிட்டினான்; கிரி என நெருங்கிக்
கட்டினார் பட,கட்டினான்; கைகளால் மெய்யில்
தட்டினார் பட,தட்டினான்-மலை எனத் தகுவான்.

     மலை எனத்தகுவான் - மலை எனச்சொல்லத்தக்கவனாய
(பேருருவம் பெற்ற) அனுமன்; முட்டினார் பட முட்டினான் - தன்னை
முட்டின அரக்கர் இறக்கும்படி (தான் அவரை) முட்டினான்; முறை முறை
முடுகி கிட்டினார் பட கிட்டினான் -
வரிசை வரிசையாகத் தன்னை
நெருங்கின அரக்கர்கள் அழியுமாறு