பக்கம் எண் :

534சுந்தர காண்டம்

 

ஆறு போல் வரும்குருதி, அவ் அனுமனால்
                            அலைப்புண்டு,
ஈறு இல்வாய்தொறும் உமிழ்வதே ஒத்தது, அவ்
                            இலங்கை.

     மூளையும் நிணமும்- அவ்வரக்கர்களுடைய மூளையும்
கொழுப்புக்களும்; சேறும் வண்டலும் ஆய்த்திணிய - சேறும் வண்டலும்
போன்று நெருங்கவும்; நீறு சேர் நெடும் - புழுதிகள் சேர்ந்த நீண்ட; தெரு
எலாம் -
அந்த இலங்கையின் தெருக்கள் முழுதும்; நீத்த மாய் நிரம்ப -
வெள்ளமாகி நிறையவும்; ஆறு போல் வரும் குருதி - ஒரு நதியைப் போல
பெருகி வருகின்ற இரத்தம்; அ அனுமனால் அலைப்புண்டு - அந்த
அனுமனால் அங்கும் இங்கும் அலையும் படிதள்ளப் பட்டு; அ இலங்கை -
அந்த இலங்கை நகர்; ஈறு இல் வாய் தொறும் உமிழ்வது ஒத்தது -
முடிவில்லாத பல வாய்களின் வழியே கக்குவதுபோல் விளங்கியது.

     இலங்கையில்உள்ள தெருக்கள் நீளமாக இருத்தலால், ஈறில் வாய்
தொறும் எனக்கூறப் பட்டது.                                  (39)

அனுமன் பெரும்போர் விளைத்தல்

5528.

கருது காலினும், கையினும், வாலினும் கட்டி,
சுருதியே அன்னமாருதி மரத்திடைத் துரப்பான்;
நிருதர்,எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார்;
குருதி சாறு எனப்பாய்வது, குரை கடல் கூனில்.

     சுருதியே அன்னமாருதி - வேதத்தையே ஒத்த (நிலை பெறுதலும்
தவறாமையும் உடைய) அனுமன்; கருது காலினும் கையினும் வாலினும்
கட்டி -
எண்ணத்தக்க காலினாலும் கைகளினாலும் வாலினாலும் சில
அரக்கர்களைச் சேர்த்துக் கட்டி; மரத்திடைத்துரப்பான் நிருதர் - மரத்தின்
நடுவில் மோதுவதால் (அப்போது) அந்த அரக்கர்கள்; எந்திரத்து இடு கரும்பு
ஆம் என நெரிவார் -
ஆலையிலிட்டு ஆட்டுகின்ற கரும்பு போன்று உடல்
நொறுங்கிப் போனார்கள்; குருதி - (அவ்வுடலிலிருந்து பெருகுகின்ற) இரத்தம்;
சாறு என குரைகடல் கூனில் பாய்வது - கருப்பஞ்சாறு போல ஒலிக்கின்ற
கடலாகிய ஒரு மிடாவில் போய் பாய்கின்றதாகும்.