சில அரக்கர்கள்தங்கள் தங்களது குழந்தைகளைத் தமது ஆயுதங்களினால் கொன்றார்கள். அந்தஅரக்கர்களின் அழிவு, அவர்களது வீடு, மனைவி, மக்கள் அழிவதற்கு உடன் காரணமாயிற்று என்பதாம். (42) | 5531. | ஆடல் மாக்களிறு அனையவன், அரக்கியர்க்கு அருளி, ‘வீடு நோக்கியேசெல்க’ என்று, சிலவரை விட்டான்; கூடினார்க்கு அவர்உயிர் எனச் சிலவரைக் கொடுத்தான்; ஊடினார்க்கு அவர்மனைதொறும் சிலவரை உய்த்தான். |
ஆடல் மா களிறுஅனையவன் - பகைவரைக் கொல்லும் வலிமைபொருந்திய பெரிய ஆண் யானை போன்ற அனுமன்; அரக்கியர்க்கு அருளி - அரக்கியர் சிலர் படுகின்ற துன்பத்தைக் கண்டு அவர்கள் மேல் கருணை கொண்டு; சிலரை வீடு நோக்கியே செல்க என்று விட்டான் - சிலஅரக்கரை ‘உங்கள் வீடு நோக்கிச் செல்லுங்கள்’ என்று கொல்லாது விட்டான்;சிலவரை, கூடினார்க்கு அவர் உயிர் என கொடுத்தான் - சில அரக்கரை,அப்போதுதான் சேர்ந்தவராகிய இளம் பெண்களுக்கு உயிர் போன்றுஇருப்பவர் என்று, கொல்லாது விடுத்தான்; ஊடினார்க்கு - ஊடல் கொண்டமகளிர்களுக்கு, இரங்கி; அவர் மனை தொறும் சிலவரை உய்த்தான் -அவர் வீடு தோறும் அவர்களது கணவர் போய்ச் சேருமாறு அவர்களைஅனுப்பி விட்டான். இதனால்,அனுமனுக்கு வீரத்தோடு ஈரமும் (இரக்கம்) இருந்தது என்பது புலப் படுகின்றது. (43) | 5532. | தரு எலாம்உடல்; தெற்றி எலாம் உடல்; சதுக்கத்து உரு எலாம் உடல்;உவரி எலாம் உடல்; உள்ளூர்க் கரு எலாம் உடல்;காயம் எலாம் உடல்; அரக்கர் தெரு எலாம்உடல்; தேயம் எலாம் உடல்-சிதறி. |
சிதறி, தருஎலாம் உடல் - (அனுமன் வீசிஎறி்ந்ததனால்) நாற்புறத்தி்லும் சிதறுண்டு மரங்களில் எல்லாம் அரக்கர்களது உடல்கள்; தெற்றி எலாம் உடல் - தெருத்திண்ணைகளில் எல்லாம் உடல்கள்; சதுக்கத்து உருஎலாம் உடல் - நாற்சந்தி கூடும் |