ஆக இச்செருவிளைவுறும் அமைதியில் - இவ்வாறு, இப்போர் நடக்கும் சமயத்தில்; அரக்கர் மோகம் உற்றனர் ஆம் என - சில அரக்கர்கள் அறிவு மயக்கம் கொண்டவர்கள் போல; முறை முறை முனிந்தார் - மேன் மேலும் கோபம் கொண்டவர்களாகி; மாகம் முற்றவும் - வானிடம் முழுவதும்; மாதிரம் முற்றவும் வளைந்தார் - திக்குகள் முழுவதும் சூழ்ந்து கொண்டவராய்; மேகம் ஒத்தனர் - கரிய மேகம் போல விளங்கினர்; மாருதி வெய்யவன் ஒத்தான் - அனுமன் சூரியனைப் போன்று விளங்கினான். பலபடியாகச்சிதறுண்டு போன அரக்கர்கள், இச்சமயத்தில் சினம் கொண்டு சூழ்வது அவர்களது அறிவின்மையின் செயல். இதை ‘மோகம் உற்றனர்’ என்ற தொடர்காட்டுகிறது. மாகம் - வான்; மாதிரம் - திக்கு. (திசை) (46) | 5535. | அடல்அரக்கரும், ஆர்த்தலின், அலைத்தலி்ன் அயரப் புடை பெருத்து உயர் பெருமையின், கருமையின் பொலிவின் மிடல் அயில்படை மீன் என விலங்கலின், கலங்கும் கடல்நிகர்த்தனர்-மாருதி மந்தரம் கடுத்தான். |
அடல் அரக்கரும்- வலிமைமிக்க அந்த அரக்கர்களும்; ஆர்த்தலின், அலைத்தலின் - இரைதலாலும்; (அனுமனால் இங்கும் அங்கும்) அலைக்கப்படுவதாலும்; அயர புடை பெருத்து உயர் பெருமையின் - (கண்டவர்) சோரும்படி பக்கங்கள் பருத்து உயர்ந்து தோன்றுகின்ற பெருந்தோற்றத்தாலும்; கருமையின் பொலிவின் - கருநிறத்தாலும், மிகுதியாய் (நிறைந்து) காணப்படுவதாலும்; மிடல் அயில்படை மீன் என விலங்கலின் - அவர்கள் கொண்டுள்ள வலிய வேல்படைகள் மீன்கள் போன்று விளங்குவதனாலும்; கலங்கும் கடல் நிகர்த்தனர் - (கடையும் போது) கொந்தளிக்கும் கடலுக்கு ஒப்பாக விளங்கினர்; மாருதி மந்தரம் கடுத்தான் - அனுமன், (கடலைக்கலக்கும்) மந்தரமலையை ஒத்தான். ஆர்த்தல்,அலைதல், பெருந் தோற்றம், கருமை, மீன் விலங்குதல் அரக்கர்க்கும் கடலுக்கும் பொருந்தும் பொதுத்தன்மைகள். (47) | 5536. | கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ, நிரை மணித் தலைநெரிந்து உக, சாய்ந்து உயிர் நீப்பார், | |