பக்கம் எண் :

540சுந்தர காண்டம்

அனுமன் விழுப்புண் படலும் வானவர்கள் மலர் மழை பொழிதலும்

5538.

எய்த,எற்றின, எறிந்தன, ஈர்த்தன, இகலின்
பொய்த,குத்தின, பொதுத்தன, துளைத்தன,
                              போழ்ந்த,
கொய்த, சுற்றன,பற்றின, குடைந்தன, பொலிந்த
ஐயன் மல் பெரும்புயத்தன, புண் அளப்பு அரிதால்.

     இகலில் -போரில்;எய்த எற்றின - (அவ்வரக்கர்கள்) அம்பு கொண்டு
வீசியவைகளாலும், தாக்கியவைகளாலும்; எறிந்தன ஈர்த்தன - வீசி
எறிந்தவைகளாலும் இழுத்தவைகளாலும்; பொய்த - சொரிந்தவைகளாலும்;
குத்தின பொதுத்தன -
குத்தியவைகளாலும் உள் அழுத்தியவைகளாலும்;
துளைத்தன போழ்ந்த -
துளைத்தனவற்றாலும் பிளந்தனவற்றாலும்; கொய்த
சுற்றின -
பறித்தனவாலும்  சுற்றினவாலும்; பற்றின குடைந்தன -
பிடித்தனவாலும் குடைந்தனவாலும்; பொலிந்த - விளங்கிய; ஐயன் மல்
பெரும் புயத்தன புண் அளப்பு அரிய -
சிறப்புக்குரிய அனுமனது
வலிமையில் சிறந்து விளங்கும் பெரிய தோள்களில் உண்டான விழுப்புண்கள்
அளவிடமுடியாதனவாய் மிகுந்திருந்தன.

    வினை முற்றுகளைஅடுக்கிச் சந்த நயம் விளைதல் காண்க.
வருணனையில் சலிப்பு ஏற்படாமைக்கு இதுவும் ஓர் உத்தி.           (50)

5539.

கார்க் கருந் தடங் கடல்களும், மழை முகில்
                                கணனும்,
வேர்க்க, வெஞ்செரு விளைத்து எழும் வெள்
                               எயிற்று அரக்கர்
போர்க் குழாம்படி பூசலின், ஐயனைப் புகழ்வுற்று
ஆர்க்கும்விண்ணவர் அமலையே, உயர்ந்தது, அன்று
                               அமரில்.

     கார் கரும் தடங்கடல்களும் - மிகக் கரிய பெரியகடல்களும்;
மழைமுகில் கணனும் - மழையைத் தருகின்ற மேகக் கூட்டங்களும்;
வேர்க்க -
மனம் புழுங்கும்படி (பின்னடையும் படி); வெம் செரு விளைத்து
எழும் -
கொடும் போரை உண்டாக்கி மேற் கொண்டு பற்களை உடைய
அரக்கர்களின்போர்க்கூட்டங்களில்; படி பூசலின் - தோன்றுகின்ற ஒலியை
விட;விண்ணவர் - தேவர்கள்;