பக்கம் எண் :

கடல் தாவு படலம்55

 

ஆர்ந்தேபசி தீர்வென்இது ஆணைஎன்று
     அன்னாள்சொன்னாள்
ஓர்ந்தானும்உவந்து ஒருவேன் நினது
     ஊழ்இல்பேழ்வாய்
சேர்ந்தேகுகின்றேன் வலையாமெனின்
     தின்றிடுஎன்றான்.

     அன்னாள் -அந்தச்சுரசை; ஏழ் உலகங்களும் காண - ஏழ்
உலகங்களும் பார்க்கும்படியாக; நின் யாக்கை தன்னை - உன்னுடைய
உடம்பை; காய்ந்து - வாட்டி; ஆர்ந்து பசிதீர்வென் - உண்டு பசியாறுவேன்;இது ஆணை என்று - இது சபதம் என்று; சொன்னாள் -
கூறினாள்;ஓர்ந்தானும் உவந்து - சுரசையின் எண்ணத்தை அறிந்த
அனுமானும்மகிழ்ச்சியடைந்து; ஒருவேன் - நான் விலகிப் போகமாட்டேன்;
நினது -உன்னுடைய; ஊழ்இல் பேழ் வாய் - முறை முடிவற்ற பெரிய
வாயை;சேர்ந்து ஏகுகின்றேன் - அடைந்து செல்லப் போகின்றேன்;
வலையாமெனின் - வலிமை உடையவள் ஆனால்; தின்றிடு என்றான் -
தின்பாயாக என்று கூறினான்.

      காய்தல் -சுடுதல், வாட்டுதல். புலாலைச் சுடும் முறையைப்
பேசுகின்றான். காய்ந்து என்பதற்குக் கோபித்து என்று பொருள் கூறுவதில்
சிறப்பு இருந்தால் ஏற்க. சினந்து உண்ணுதல் அரக்கியர்க்கு ஏற்கும் போலும்.
ஆணை - சபதம்.                                         (69)
4810. அக்காலைஅரக்கியும் அண்டம்
     அனந்தமாகப்
புக்கால் நிறையாத புழைப் பெரு
     வாய் திறந்து
விக்காது விழுங்க நின்றாள், அது
     நோக்கிவீரன்
திக்கார்அவள்வாய் சிறிதாம்வகை
    சேணில்நீண்டான்.

     அக்காலை -
அவ்வாறுஅனுமன் கூறிய போதில்; அரக்கியும்
அண்டம் அனந்தமாக -
அரக்கியானவளும் அண்டங்கள் எல்லையறப்
பெருகி; புக்கால் - புகுந்தாலும்; நிறையாத புழைப்பெருவாய் திறந்து -
நிரம்பாத குகைபோன்ற பெரிய வாயைத் திறந்து; விக்காது விழுங்க நின்றாள்
-
விக்காமல்