பக்கம் எண் :

சம்புமாலி வதைப் படலம்551

     தோமரம்உலக்கை கூர்வாள் - பெரிய தண்டாயுதம், உலக்கை,
கூர்மையான வாளாயுதம்; சுடர்மழு, குலிசம் - ஒளி வீசுகின்ற எரியிரும்புப்
படை, வச்சிராயுதம்; தோட்டி - அங்குசம்; அரம் தின்ற கூர்வேல் -
அரத்தினால் அராவிக் கூராக்கப்பட்ட வேலாயுதங்கள்; தழல் ஒளி வட்டம் -
நெருப்பின் சுவாலையை உடைய சக்கரம்; சாபம் - வில்; காமர்தண்டு -
அழகிய தண்டாயுதம்; எழுக்கள் - இரும்புத் தண்டுகள்; காந்தும் கப்பணம் -
ஒளி விடுகின்ற இரும்பு நெருஞ்சி முட்படைகள்; காலபாசம் - யமனுக்கு உரிய
கயிற்றின் வடிவான ஆயுதங்கள்; மாமரம், வலயம் - பெரிய மரங்கள்,
வளையங்கள்; வெம்கோல் - கொடிய அம்புகள்; முதலிய வயங்க - முதலிய
ஆயுதங்கள் விளங்கவும்.

     திசைதொறும்செறிவ செல்ல என அடுத்த கவியோடு தொடரும். தாம்,
மாது, ஓ அடைகள்.                                           (6)

5556.

எத்தியஅயில், வேல், குந்தம், எழு, கழு முதல ஏந்தி,
குத்தியதிளைப்ப; மீதில் குழுவின மழை மாக்
                                 கொண்டல்
பொத்து உகு பொருஇல் நல் நீர் சொரிவன போவ
                                 போல,
சித்திரப்பதாகை ஈட்டம் திசைதொறும் செறிவ
                                 செல்ல;

     எத்திய அயில்வேல் குந்தம் - தாக்கி எறியப்பட்டகூர்மையான
வேல்கள் எறியீட்டிகள்; எழு, கழு முதல ஏந்தி - இரும்புத்தடிகள் கழுக்கள்
முதலிய ஆயுதங்களைத் தரித்து; குத்திய திளைப்ப - குத்தித் திளைப்பதால்;
மீதில் குழுவின மழை - மேலே கூடியிருந்த மழையை; மாக்கொண்டல் -
பொழியக்கூடிய பெரும் இருண்ட மேகங்கள்; பொத்து உகு பொரு இல் நல்
நீர் சொரிவன போவபோல -
குத்தப்பட்டுச் சிந்தும் ஒப்பில்லாத நல்ல
நீரைச் சொரிவனவாய்ச் செல்வன போல; சித்திரப் பதாகை ஈட்டம் -
அழகுள்ள கொடிகளின் கூட்டம்; திசைதொறும் செறிவ செல்ல - எல்லாத்
திக்குகளிலும் நெருங்கப் பெற்றனவாய்ச் செல்லவும்.

     ‘பல்லியம்துவைப்ப’ என அடுத்தகவியோடு தொடரும். ‘எற்றிய’ என்பது
படைகள் ஏந்திச் சென்ற மிகுதியான கொடிகள் அசைந்து செல்லும் காட்சி
உயர்வு நவிற்சியாகப் புனையப்பட்டுள்ளது. வீரர்களின் படைக்கலங்கள் குத்திக்
குடைந்ததால் மேகங்கள் சொரிந்த நீர்ப்