பக்கம் எண் :

552சுந்தர காண்டம்

பொழிவுபோல அந்தக்கொடிகள் விளங்கினவாம். படைக்கலங்களின் மிகுதியும்
நீட்டமும் குறிக்கப்பட்டன. மேகங்கள் சொரிவனபோல் கொடிகள் சொரிந்தன
என்பதும் மிகுதி குறித்த கற்பனையே.                            (7)

5557.

பல்லியம்துவைப்ப, நல் மாப் பணிலங்கள் முரல,
                               பொன் தேர்ச்
சில்லிகள் இடிப்ப, வாசி சிரித்திட, செறி பொன்
                               தாரும்
வில்லும் நின்றுஇசைப்ப, யானை முழக்கம் விட்டு
                         ஆர்ப்ப, விண்தோய்
ஒல் ஒலி வானில்தேவர் உரை தெரிவு ஒழிக்க
                         மன்னோ;

     பல் இயம்துவைப்ப - பலவகை வாத்தியங்கள்ஒலிக்கவும்; நல்மாப்
பணிலங்கள் முரல -
அழகிய பெரிய சங்குகள் முழங்கவும்; பொன்
தேர்ச்சில்லிகள் இடிப்ப -
பொன் மயமான தேரின் சக்கரங்கள் (வேகமாக
உருள்வதால்) ஒலியை உண்டாக்கவும்; வாசி சிரித்திட - குதிரைகள் சிரிப்பன
போலக் கனைக்கவும்; செறி பொன்தாரும் வில்லும் நின்று இசைப்ப -
அடர்ந்த பொன்னால் அமைந்த கிண்கிணி மாலைகளும் வில்லும் நிலையாக
நின்று ஒலிக்கவும்; யானை முழக்கம் விட்டு ஆர்ப்ப - யானைகள்
பெருமுழக்கத்தை உண்டாக்கிப் பிளிறவும்; விண் தோய் ஒல் ஒலி -
(இவ்வாறு தோன்றி) ஆகாயத்தில் சென்ற ஒல் என்னும் ஒலிகள்; வானில்
தேவர் உரை தெரிவு ஒழிக்க -
வானில் உள்ள தேவர்கள் பேசும்
வார்த்தைகளைத் தெரிந்து கொள்ள முடியாதபடி நீக்கி விடவும்.

     ‘அன்னவன் சேனைசெல்ல’ என அடுத்த கவியைத் தொடரும். ஒல்
என்றது ஒலிக்குறிப்பு மன், ஓ. ஈற்றசைகள்                       (8)

5558.

மின் நகுகிரிகள் யாவும் மேருவின் விளங்கித்
                                  தோன்ற,
தொல் நகர்பிறவும் எல்லாம் பொலிந்தன, துறக்கம்
                                  என்ன-
அன்னவன் சேனைசெல்ல, ஆர்கலி இலங்கை ஆய
பொன் நகர்தகர்ந்து, பொங்கி ஆர்த்து எழு தூளி
                                  போர்ப்ப.