| நிருதியின்பிறந்த வீரர்; நெருப்பு இடை பரப்பும் கண்ணர்; பரிதியின்பொலியும் மெய்யர்-படு மதக் களிற்றின் பாகர். |
மதம்படுகளிற்றின் பாகர் - மதநீர் தோன்றுகின்றஆண் யானைகளைச் செலுத்தும் போர் வீரர்கள்; பொரு திசை யானை ஊரும் புனிதனைப் பொருவும் பொற்பர் - போர் செய்யும் தன்மையுள்ள (கிழக்குத்) திக்கின் யானையாகிய ஐராவதத்தைச் செலுத்துகின்ற பரிசுத்தனான இந்திரனை ஒத்த அழகுடையவர்கள்; சுரி படைத் தொழிலும் மற்றை அங்குசத் தொழிலும் தொக்கார் - வாட்படைத் தொழிலிலும் மற்றும் அங்குசம் கொண் டுயானையைச் செலுத்திப் போர் செய்யும் தொழிலிலும் சேர்ந்து தேர்ந்தவர்கள்;நிருதியின் பிறந்த வீரர் - நிருதி என்னும் தென் மேற்கு திசையின் காவல்தெய்வமாகிய பெண்ணின் வழியில் பிறந்தவர்கள்; நெருப்பு இடை பொழியும்கண்ணர் - நெருப்பை இடை இடையே பொழியும் கண்களை உடையவர்கள்;பரிதியின் பொலியும் மெய்யர் - சூரியனைப் போன்று ஒளிவிட்டு விளங்கும்உடலை உடையவர்கள். நிருதி என்றபெண், தென் மேற்குத் திசைக்குக் காவல் தெய்வம். அவள் வழியில் தோன்றினமையால் நிருதர் எனப்பட்டனர். அரக்கர்களில் இவர்கள் ஒரு வகையினர். இது, யானை வீரர் திறம் கூறியது. (12) குதிரைப் படையினர் 5562. | ஏர் கெழுதிசையும், சாரி பதினெட்டும், இயல்பின் எண்ணிப் போர் கெழு படையும் கற்ற வித்தகப் புலவர், போரில், தேர் கெழுமறவர், யானைச் சேவகர், சிரத்தி்ல் செல்லும் தார் கெழு புரவிஎன்னும் தம் மனம் தாவப் போனார். |
ஏர் கெழுதிசையும் - (செல்லுதற்கு உரிய) அழகிய திசைகளையும்; சாரி பதினெட்டும் - பதினெட்டு வகைப்பட்ட சாரிகளையும்; இயல்பின் எண்ணி - முறைப்படி சிந்தித்துப் |