5567. | நின்றனதிசைக்கண் வேழம் நெடுங் களிச் செருக்கு நீங்க, தென் திசைநமனும் உள்ளம் துணுக்கென, சிந்தி வானில் பொன்றல் இல்மீன்கள் எல்லாம் பூ என உதிர, பூவும் குன்றமும்பிளக்க, வேலை துளக்குற, கொட்டினான் தோள். |
திசைக்கண்நின்றன வேழம் - எட்டுத் திசைகளிலும்நின்றவையான திக்கு யானைகள்; நெடும் களிச் செருக்கு நீங்க - (தமது) மதக் களிப்பு நீங்கவும்; தென் திசை நமனும் - தெற்குத் திக்குப் பாலகனாகிய யமனும்; துணுக்கு என உள்ளம் சிந்த - திடுக்கிட்டு மனம் சிதறவும்; வானில் பொன்றல் இல் மீன்கள் எல்லாம் பூ என உதிர - ஆகாயத்தி்ல் அழிவு பெறாத நட்சத்திரங்கள் யாவும் மலர்களைப் போலக் கீழே உதிர்ந்து விழவும்; பூவும் குன்றமும் பிளக்க - பூமியும் (அதன் மேலுள்ள) மலைகளும் பிளந்து போகவும்; வேலை துளக்குற தோள் கொட்டினான் - (அனுமன் தனது) தோளைத் தட்டினான். பூ - பூமி; மீன்- நட்சத்திரங்கள். (18) அனுமனை அணுக முடியாதஅரக்கர் தவிப்பு 5568. | அவ் வழி,அரக்கர் எல்லாம், அலை நெடுங் கடலின் ஆர்த்தார்; செவ் வழிச்சேறல் ஆற்றார், பிணப் பெருங் குன்றம் தெற்றி, வெவ் வழி குருதிவெள்ளம் புடை மிடைந்து உயர்ந்து வீங்க, ‘எவ் வழிச்சேறும்’ என்றார்; தமர் உடம்பு இடறி வீழ்வார். |
அவ்வழி -அப்போது;அரக்கர் எல்லாம் - போருக்குச் சென்ற அரக்கர்கள் யாவரும்; அலை நெடும் கடலின் ஆர்த்தார் - அலைகளை உடைய பெரிய கடல் போல ஆரவாரித்து; பிணப் பெருங்குன்றம் தெற்றி - பெரிய பிணமலைகள் கிடந்து போகவொட்டாது தடுத்தலாலும்; வெவ் வழி குருதி வெள்ளம் புடை |