பக்கம் எண் :

560சுந்தர காண்டம்

மிடைந்து உயர்ந்துவீங்க - வெம்மையுடனே பெருகுகின்ற இரத்தப் பெருக்கு
(போகும் இடங்களி்ல் எல்லாம்) நெருங்கி மிக்குப் பெருகுவதாலும்;
தமர்உடம்பு இடறி வீழ்வார் -
தமது சுற்றத்தவர்களுடைய பிணங்களின்
மேல்இடறி வீழ்கின்றவராய்; செவ் வழி சேறல் ஆற்றார் - (அனுமன்
உள்ளஇடத்துக்கு) நேரான வழியில் செல்ல முடியாதவர்களாய்; எவ்வழிச்
சேறும்என்றார் -
எந்த வழியாகப் போய்ச் சேருவோம் என்று செல்லும்
வழிதெரியாது திகைத்து நின்றார்கள்.

     
செவ்வழி - நேர் வழி;தெற்றுதல் -தடுத்தல்.                 (19)

சம்புமாலி அணிவகுத்து வருதலும்
அனுமன் போருக்குஅமைந்து நிற்றலும்

5569.

ஆண்டுநின்று, அரக்கன், வெவ்வேறு அணி வகுத்து,
                            அனிகம்தன்னை,
மூண்டு இருபுடையும், முன்னும், முறை முறை முடுக
                            ஏவி,
தூண்டினன், தானும்திண் தேர்; தோரணத்து
                           இருந்த தோன்றல்,
வேண்டியதுஎதிர்ந்தான் என்ன, வீங்கினன், விசயத்
                           திண் தோள்.

     அரக்கன் ஆண்டுநின்று - சம்புமாலி அங்கிருந்து; அனிகம் தன்
னை-
தனது சேனையை; வெவ்வேறு அணி வகுத்து - வெவ்வேறு
அணியாகப்பிரித்து; இரு புடையும் முன்னும் முறை மூண்டு முடுக ஏவி -
அனுமனதுஇரண்டு பக்கங்களிலும் எதிரிலும் முறைமுறையாக மூண்டு விரையும்
படிஆணையிட்டு; தானும் திண் தேர் தூண்டினன் - தானும் தனது வலிய
தேரைச் செலுத்திக் கொண்டு சென்றான்; தோரணத்து இருந்த தோன்றல் -
(அப்போது) தோரணத்தின் மீது அமர்ந்திருந்த அனுமன்; வேண்டியது
எதிர்ந்தான் என்ன -
தான் விரும்பியது தன்முன் எதிர்ப்பட்டது என்று;
விசயத் திண்தோள் வீங்கினன் -
தனது வெற்றி தரும் வலிய தோள்கள்
பூரிக்கப்பெற்றான்.

     சம்புமாலிசேனையை அணி வகுத்துக் கொண்டு தேரில் வருவதைப்
பார்த்து, ‘நாம் நினைத்தது வந்தது’ என்று அனுமன்