பக்கம் எண் :

சம்புமாலி வதைப் படலம்563

 

விரிந்தனபொறிக் குலம்; நெருப்பு என வெகுண்டு,
                           ஆண்டு
இருந்தவன்,கிடந்தது ஓர் எழுத் தெரிந்து எடுத்தான்.

     ஆண்டு இருந்தவன்- அந்தத்தோரணத்தின் மீது இருந்த அனுமன்;
கரத்தால் - (தனது) கைகளாலே; கருங்கழல் அரக்கர் தம் படைக்கலம் -
பெரிய வீரக் கழலணிந்த அந்த அரக்க வீரர்கள் எறிந்த ஆயுதங்களை;
பெருங்கடல் உற புடைத்து இறுத்து - பெரிய கடலில் போய் விழும் படி
அடித்தும், முறித்தும்; உகபிசைந்தான் - சிதறிப் போகும்படி பயன்படாத
வகையில் அழித்தெறிந்தான்; பொறிக் குலம் விரிந்தன - (அச்செய்கையால்)
வண்டுகளின் கூட்டம் எங்கும் பரவலாயின; நெருப்பு என வெகுண்டு -
(அப்போது அவன்) பற்றி எரிகின்ற தீயைப் போலப் பெருங்கோபம் கொண்டு;
கிடந்தது ஓர் எழு தெரிந்து எடுத்தான் - அங்குக் கிடந்த ஒரு இரும்புத்
தடியைத் தேர்ந்து எடுத்துக்கொண்டான்.

     அனுமன்போர்க்களத்தில் செய்த வீரச் செயல் கூறப்பட்டது. பொறி -
வண்டு; ஆகுபெயர். ‘பொறிக்குலம் எழ’ (5429) என முன்னும் வந்தது. (23)

5573.

இருந்தனன்,எழுந்தனன், இழிந்தனன், உயர்ந்தான்,
திரிந்தனன்,புரிந்தனன், என நனி தெரியார்;
விரிந்தவர்,குவிந்தவர், விலங்கினர், கலந்தார்,
பொருந்தினர்,நெருங்கினர், களம் படப் புடைத்தான்.

     இருந்தனன்எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான் - தோரணத்தில்
மீது அமர்ந்திருந்த அனுமன், எழுந்து, கீழ் இறங்கி, நிமிர்ந்தவனாகி; என நனி
தெரியார் -
என்று நன்றாகத் தெரிந்து கொள்ளாதவராய்; விரிந்தவர் - பரவி
நின்றவர்களும்; குவிந்தவர் - ஒருங்கு சேர்ந்திருந்தவர்களும்; விலங்கினர்
கலந்தார் -
விலகிச் சென்றவர்களும், ஒன்று படக் கலந்து கொண்டவர்களும்;
பொருந்தினர் நெருங்கினர் - போர்க்களத்தில் பொருந்தியிருந்தவர்களும்,
நெருங்கி நின்றவர்களும்; களம்படப் புடைத்தான் - போர்க்களத்தில்
அழிந்து போக, அந்த எழுவால் ஒரு சேர அடித்துக் கொன்றான்.

     அனுமன் எப்படிச்செயல்படுகிறான் என்பதைக்கூட அரக்கரால் அறிய
முடியவில்லை; அவ்வளவு வேகமாக அவன் செயல்பட்டான்.