என்ன நடக்கிறதுஎன்பதை அரக்கர் சேனை அறியுமுன்னே அனுமன் அவர்களை அழித்தான். இருந்தவன் (அனுமன்) எழுந்து, இழிந்து, உயர்ந்து, திரிந்து போர் செய்தான்; அவன் செயலை அறியாத அரக்க வீரர்களை எழுவால் அடித்துக் கொன்றான். இருந்தனன். வினையாலணையும் பெயர். எழுந்தனன் இழிந்தனன் உயர்ந்தான் திரிந்தனன் - முற்றெச்சங்கள். (24) | 5574. | எறிந்தன,எய்தன, இடி உரும் என மேல் செறிந்தனபடைக்கலம், இடக் கையின் சிதைத்தான், முறிந்தன தெறும்கரி; முடிந்தன தடந் தேர்; மறிந்தன பரிநிரை-வலக் கையின் மலைந்தான்.* |
எறிந்தன, எய்தன- அரக்கர்களால் வீசி எறியப்பட்டனவும், எய்யப்பட்டனவுமாகிய; இடி உரும் என மேல் செறிந்தன படைக்கலம் - பேரிடி போலத் தன் மேல் நெருங்கி செறிந்தனவான ஆயுதங்களை எல்லாம்; இடக் கையின் சிதைத்தான் - (தனது) இடக்கையால் அழித்துத்தள்ளி; வலக் கையின் மலைந்தான் - தன் வலக்கையால் போர் செய்யலானான்; தெறும் கரி முறிந்தன - (அதனால்) எதிர்த்து அழிக்கும் வலிமையுள்ளயானைகள் முறிபட்டு இறந்தன; தடம் தேர் முடிந்தன - பெரிய தேர்கள் சிதைந்து போயின; பரிநிரை மறிந்தன - குதிரைகளின் கூட்டம் கீழே விழுந்து இறந்தன. அனுமன் தன் இருகைகளாலும் விரைந்து போர் செய்த திறம் கூறப்பட்டது. சிதைத்தான்; முற்றெச்சம். (25) | 5575. | இழந்தனநெடுங் கொடி; இழந்தன இருங் கோடு; இழந்தன நெடுங்கரம்; இழந்தன வியன் தாள்; இழந்தன முழங்குஒலி; இழந்தன மதம் பாடு; இழந்தன பெருங்கதம்-இருங் கவுள் யானை. |
இருங்கவுள் யானை- (அனுமனால் அடிக்கப்பட்ட) மதம் பெருகும் கன்னத்தை உடைய யானைகள்; நெடுங் கொடி இழந்தன - (தம் மேல் பிடிக்கப்பட்ட) பெரிய கொடிகளை இழந்தன;இருங்கோடு இழந்தன - பெரிய தந்தங்களை இழந்தன;நெடும் கரம் இழந்தன - பெரிய துதிக்கைகளை இழந்தன; வியன்தாள்இழந்தன - பெரிய கால்களை இழந்தன; முழங்கு ஒலி இழந்தன -வீறிடுகின்ற ஒலியை இழந்தன; மதம் பாடு இழந்தன - மதம் ஒழுகுதலைஇழந்தன; பெருங் கதம் இழந்தன - பெரிய கோபத்தை இழந்தன. |