முன்பின்னாகத்திருப்பப் பட்டும் முறிந்து போயின; மலை போல் படிந்தன முடிந்தன கிடந்தன - (இவ்வாறு பல குதிரைகள் இந்திரனால் இறகு முறிக்கப்பட்ட) மலைபோல (தம்முடையகதி) முடியப் பெற்று கீழே விழுந்து கிடந்தன. குதிரைப்படைகளின் அழிவு கூறப்பட்டது. தார் - கிண்கிணிமாலை. (28) | 5578. | வெருண்டனர், வியந்தனர், விழுந்தனர், எழுந்தார்; மருண்டனர்,மயங்கினர், மறிந்தனர், இறந்தார்; உருண்டனர்,உலைந்தனர், உழைத்தனர், பிழைத்தார்; சுருண்டனர்,புரண்டனர், தொலைந்தனர்;- மலைந்தார். |
மலைந்தார் -அனுமனோடுபோர் செய்த அரக்கர்களில் (சிலர்); வெருண்டனர் வியந்தனர் விழுந்தனர் - அனுமனது திறத்தைக் கண்டு அச்சம் கொண்டு வியந்தவண்ணம் கீழே விழுந்தனர்; எழுந்தார் - விழுந்தவர்களில் சிலர் எழுந்தார்; மருண்டனர் மயங்கினர் மறிந்தனர் இறந்தார் - மருண்டும் மயங்கியும் குப்புற விழுந்து இறந்தனர்; பிழைத்தார் உருண்டனர் உலைந்தனர் உழைத்தனர் - (அவ்வாறு இறவாமல்) உயிர் பிழைத்தவர்களில் சிலர் உருண்டு, வருந்தி உடல் துவண்டு; சுருண்டனர் புரண்டனர், தொலைந்தனர் - தமது உறுப்புக்கள் சுருளப் பெற்று, பூமியில் புரண்டு வலிகெட்டு ஓடிவிட்டனர். இது,காலட்படையின் அழிவு கூறியது. (29) | 5579. | கரிகொடுகரிகளைக் களப் படப் புடைத்தான்; பரிகொடுபரிகளைத் தலத்திடைப் படுத்தான்; வரி சிலை வயவரைவயவரின் மடித்தான்; நிரை மணித்தேர்களைத் தேர்களின் நெரித்தான். |
கரி கொடுகரிகளை களப்படப் புடைத்தான் - (அனுமன்) யானைகளைக் கொண்டே, யானைகளைப் போர்க்களத்தில் இறந்து விழும்படி அடித்துக் கொன்றான்; பரி கொடு பரிகளைத் தலத்திடைப் படுத்தான் - குதிரைகளைக் கொண்டே குதிரைகளைத் தரையில் வீழ்த்தி அழித்தான்; வரி சிலை வயவரை வயவரின் மடித்தான் - கட்டமைந்த வில்லை உடைய வீரர்களை அவ்வீரரில் சிலரை எடுத்து விட்டெறிந்து அழித்தான்; நிரை மணித் தேர்களை |