வேல்களோடும்; விறலொடும் - வீரத்தோடும்; விளிக்கும் சொல்லொடும் - கூவுகின்ற சொற்களோடும்; உயிரொடும் - அவர்கள் உயிர்களோடும்; நிலத் தொடும் துகைத்தான் - பூமியோடு பூமியாய் அழுந்த மிதித்து அழித்தான். பகடு - வலிமை;‘பகட்டு மார்பின்’ (புற, நா, 88,4) (32) | 5582. | புகை நெடும்பொறி புகும் திசைதொறும் பொலிந்தான்; சிகை நெடுஞ்சுடர் விடும் தேர்தொறும் சென்றான்; தகை நெடுங்கரிதோறும், பரிதொறும், சரித்தான்; நகை நெடும்படைதொறும், தலைதொறும், நடந்தான். |
புகை நெடும்பொறி புகும் திசை தொறும் பொலிந்தான் - புகையோடுகூடிய நீண்ட நெருப்புப் பொறி (சினத்தீ) செல்லும் இடங்களில் எல்லாம் சென்று விளங்குபவனாகிய அனுமன்; சிகை நெடும் சுடர் விடும் தேர்தொறும் சென்றான் - சிகரங்களினின்று நீண்ட ஒளி விடும் தேர்கள் இருக்குமிடம் எல்லாம் சென்றான்; தகை நெடும் கரிதொறும் பரிதொறும், சரித்தான் - சிறப்பமைந்த பெரிய யானைகள் குதிரைகள் இருக்கும் இடங்களில் எல்லாம் சஞ்சரித்தான்; நகை நெடும் படை தொறும் - (தன்னைப் பார்த்து அற்பக்குரங்கு என்று) ஏளனம் செய்து சிரித்த போர்ப் படைகள் தோறும்; தலை தொறும் நடந்தான் - அப்படையில் உள்ள வீரர்கள் தலை தோறும் நடந்து சென்று அவர்களை அழித்தான். பொலிந்தான்;வினையாலணையும் பெயர். (பொலிந்தவன்) (33) | 5583. | வென்றிவெம் புரவியின் வெரிநினும், விரவார் மன்றல் அம்தார் அணி மார்பினும், மணித் தேர் ஒன்றின்நின்றுஒன்றினும், உயர் மத மழை தாழ் குன்றினும்,-கடையுகத்து உரும் எனக் குதித்தான். |
வென்றிவெம்புரவியின் வெரிநினும் - வெற்றியைத் தரத்தக்கவலிய குதிரைகளின் முதுகிலும்; விரவார் மன்றல் அம் தார் அணி மார்பினும் - பகைவர்களான அரக்க வீரர்களது நறுமணம் உள்ள மாலைகள் அணிந்த மார்புகளிடத்தும்; மணித்தேர் ஒன்றின் நின்று ஒன்றினும் - மணிகள் கட்டப்பெற்ற தேர்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றிலும்; உயர் மத மழை தாழ் குன்றினும் - உயர்ந்தோங்கிய |