பக்கம் எண் :

570சுந்தர காண்டம்

5585.

அண்ணல்-அவ் அரியினுக்கு அடியவர் அவன் சீர்
நண்ணுவர் எனும்பொருள் நவை அறத் தெரிப்பான்,
மண்ணினும்,விசும்பினும், மருங்கினும், வலித்தார்
கண்ணினும்,மனத்தினும்,-தனித் தனி கலந்தான்.

     அண்ணல் -பெரியோனாகிய அனுமன்; அவ் அரியினுக்கு அடியவர்
-
அந்தத் திருமாலுக்கு அடியவர்கள்; அவன் சீர் நண்ணுவர் எனும்
பொருள் -
அவனுக்குரிய சிறப்புக்களை அடைவர் என்று கூறப்படும் சாத்திரப்
பொருளை; நவை அறத் தெரிப்பான் - குற்றமில்லாமல் (செவ்வனே)
தெரி்விப்பவனாய்; மண்ணினும் விசும்பினும் மருங்கிலும் - பூமியிலும்
வானத்திலும் பக்கங்களில் உள்ள திக்குகளிலும்; வலித்தார் - வலிமை
கொண்டு போரிட்ட அரக்கர்களுடைய; கண்ணினும் மனத்தினும் -
கண்ணுக்கு எதிரிலும் மனத்திலும்; தனித்தனி கலந்தான் -
ஒவ்வொருவரிடமாகவும் கலந்து விளங்கினான்.                   (36)

5586.

கொடித்தடந் தேரொடும் குரகதக் குழுவை
அடித்து, ஒரு தடக்கையின் நிலத்திடை அரைத்தான்;
இடித்து நின்றுஅதிர் கதத்து, எயிற்று வன்
                                பொருப்பை,
பிடித்து, ஒருதடக் கையி்ன், உயிர் உகப் பிழிந்தான்.

     குரகதக் குழுவை -குதிரைக்கூட்டங்களை; கொடித் தடம்
தேரொடும் -
கொடி கட்டிய பெரிய தேர்களோடும்; ஒரு தடக் கையின்
அடித்து -
ஒரு பெரிய கையால் அடித்து; நிலத்திடை அரைத்தான் -
தரையிலே தேய்த்தான்; கதத்து இடித்து நின்று அதிர் - சினத்தினால்
கர்ச்சித்து நின்று பேரொலி செய்கின்ற; எயிற்றுவன் பொருப்பை -
தந்தங்களை உடைய வலியமலை போன்ற யானைகளை; ஒரு தடக்கையின்
பிடித்து -
மற்றொரு பெரிய கையினால் பிடித்து; உயிர் உகப் பிழிந்தான் -
அவற்றின் உயிர் சிந்தப் பிழிந்து கொன்றான்.

     பொருப்பு; யானை. உவமை ஆகுபெயர். எயிற்று வன் பொருப்பு எனத்
தந்தங்களை உடைய மலை என யானையை உருவகித்தார்.           (37)

5587.

கறுத்து எழுநிறத்தினர், எயிற்றினர், கயிற்றார்,
செறுத்து எரிவிழிப்பவர், சிகைக் கழு வலத்தார்,