| | மறுத்து எழுமறலிகள் இவர் என அதிர்ந்தார், ஒறுத்து,உருத்திரன் என, தனித் தனி உதைத்தான். |
கறுத்து எழுமனத்தினர் - கோபித்து எழுகின்றமனத்தை உடையவர்களும்; எயிற்றினர் - கோரப் பற்களை உடையவர்களும்; கயிற்றார் - பாசம் என்னும் ஆயுதத்தைக் கொண்டவர்களும்; செறுத்து எரி விழிப்பவர் - பகைத்து நெருப்புப் போல விழிப்பவர்களும்; சிகைக் கழு வலத்தார் - கூரிய கழு என்னும் படை வலிமை உடையவர்களும்; இவர் மறுத்து எழு மறலிகள் என அதிர்ந்தார் - இவர்கள் பகைமை பாராட்டிக் கிளம்புகின்ற யமன்களே என்னும்படி பெரு முழக்கம் செய்பவர்களுமான அரக்க வீரரை; ஒறுத்து - கடிந்து; உருத்திரன் என - உருத்திர மூர்த்தியைப் போல; தனித் தனி உதைத்தான் - அனுமனும் ஒவ்வொருவராக உதைத்துக் கொன்றான். மார்க்கண்டேயர்பொருட்டு, சிவபிரான் யமனைத் தன் திருவடியால் உதைத்து அழித்ததைக் குறிக்கொண்டு, அனுமன், உருத்திரன் எனப்பட்டான். கயிறு - பாசப் படை; சிகைக்கழு - நுனி கூரிய கழுப்படை. (38) | 5588. | சக்கரம்,தோமரம், உலக்கை, தண்டு, அயில், வாள், மிக்கன தேர்,பரி, குடை, கொடி, விரவி உக்கன; குருதிஅம்பெருந் திரை உருட்டிப் புக்கன கடலிடை,நெடுங் கரப் பூட்கை. |
உக்கன குருதி அம்பெரும் திரை உருட்டி - அரக்கர்கள் சிந்திய இரத்த வெள்ளத்துப் பெரும் அலைகளால் உருட்டப்பட்டதால் (அவற்றின் இடையே); சக்கரம், தோமரம் - சக்கரங்களும் பெரிய தண்டாயுதங்களும்; உலக்கை, தண்டு, அயில்வாள் - உலக்கைகளும் கதைகளும் வேல்களும் வாள்களும்; மிக்கன - மிகுந்தனவாகி; தேர், பரி, குடை, கொடி விரவி - தேர்களும், குதிரைகளும், குடைகளும் கொடிகளும் ஒன்றாகக் கலந்து; நெடும் கரப் பூட்கை - நீண்ட துதிக்கைகளை உடைய யானைகள்; கடல் இடை புக்கன - கடலின் இடையே போய்ப் புகுந்தன. பூட்கை - பூண் + கை; யானை. (39) |