| 5589. | எட்டின விசும்பினை;-எழுப் பட எழுந்த- முட்டின மலைகளை;முயங்கின திசையை; ஒட்டின ஒன்றைஒன்று; ஊடு அடித்து உதைந்து தட்டுமுட்டு ஆடின,தலையொடு-தலைகள். |
எழுபட எழுந்ததலைகள் - (அனுமன் வீசிய) எழுஎன்னும் ஆயுதம் பட்டதனால் (உடலை விட்டு வேறாகி) எழுந்தனவான அரக்கர்களின் தலைகள்; விசும்பினை எட்டின - ஆகாயத்தை அளாவினவும்; மலைகளை முட்டின - மலைகளின் மீது மோதியனவும்; திசையை முயங்கின - திக்குகளைத் தழுவியனவும்; ஒன்றை ஒன்று ஒட்டின - ஒன்றோடு ஒன்று சேர்ந்தனவுமாகி; ஊடு அடித்து உதைந்து - போர்க்களத்தில் அடிபட்டுத் தள்ளப்பட்டு; தலையொடு தட்டு முட்டு ஆடின - (முன்னமே போர்க்களத்தில்) விழுந்து கிடந்த) தலைகளோடு தட்டு முட்டுப் பொருள் போல அங்கும் இங்கும் சிதறிக் கிடந்தன. (40) சம்புமாலிசினத்தோடு போருக்கு விரைதல் அறுசீர்ஆசிரிய விருத்தம் | 5590. | கானே காவல் வேழக் கணங்கள் கத வாள் அரி கொன்ற வானே எய்த,தனியே நின்ற மத மால் வரை ஒப்பான், தேனே புரை கண்கனலே சொரிய, சீற்றம் செருக்கினான், தானேஆனான்-சம்புமாலி, காலன் தன்மையான். |
காலன்தன்மையான் சம்பு மாலி - யமன் போன்ற கொடிய தன்மையனாகிய சம்புமாலி; கத(ம்)வாள் அரி கொன்ற - கோபம் உள்ள ஒளி தங்கிய சிங்கத்தினால் கொல்லப்பட்டனவாய்; கானே காவல் வேழம் கணங்கள் வானே எய்த - காட்டையே தங்கட்கு உரிய வாழிடமாகக் கொண்ட யானைக் கூட்டங்கள் விண்ணுலகம் சேர (இறக்க); தனியே நின்ற மதமால் - தனிப்பட்டு நின்ற; வரை ஒப்பான் - மத மயக்கம் கொண்ட யானையை ஒத்து; தானே ஆனான் - (தன்னோடு வந்தவரெல்லாம் இறக்க) தான் ஒருவனே எஞ்சி நின்றவனாய்; தேனே புரை கண் கனலே சொரிய |