என்று சொல்லி;நெருப்பு நக நக்கான் - நெருப்புப் பெருகி வரச் சிரித்து; எனைப் பொன்று வாரின் ஒருவன் என்றாய் போலும் என்னா - என் னைப்போரில் இறப்பவருள் ஒருவன் என்று எளிதாக நினைத்தாய் போலும் என்றுகூறி; வன் திண் சிலையின் வயிரக் காலால் - மிக வலிய தன் வில்லின்வயிரம் போன்று உறுதியான தண்டினால்; வடிதிண் சுடர் வாளி - கூர்மைவாய்ந்த வலிய ஒளி வீசும் அம்புகளை; ஒன்று பத்து, நூறு நூறாயிரமும் -ஒன்றும், பத்தும், நூறும் நூறாயிரமும் என்ற கணக்குப் படி; உதைப்பித்தான் -(அனுமன் மீது) செலுத்தினான். நன்று நன்று;அடுக்கு இகழ்ச்சிப் பொருளது. நகுதல் - பெருகுதல் என்னும் கருத்தில் வந்தது. வன் திண்: ஒரு பொருட் பன்மொழி உதைத்தல் - வலிந்து செலுத்துதல். (44) | 5594. | ‘செய்தி,செய்தி, சிலை கைக் கொண்டால், வெறுங், கை திரிவோரை, நொய்தின்வெல்வது அரிதோ ?’ என்னா, முறுவல் உக நக்கான்; ஐயன், அங்கும்இங்கும் காலால் அழியும் மழை என்ன, எய்த எய்த பகழிஎல்லாம், எழுவால் அகல்வித்தான். |
ஐயன் - சிறந்தோனானஅனுமன்; சிலை கைக் கொண்டால் - நீ வில்லைக் கையில் கொண்டால்; வெறும் கை திரி வோரை - ஆயுதம் இன்றி வெறும் கைகளோடு திரிகின்றவர்களை; நொய்தின் வெல்வது அரிதோ என்னா - எளிதில் வெல்வது அரிய செயலாகுமா ? என்று சொல்லி; முறுவல் உக நக்கான் - பற்கள் வெளியில் தோன்றுமாறு சிரித்து; எய்த எய்த பகழி எல்லாம் - சம்பு மாலி மேன் மேலும் தூண்டிய அம்புகள் அனைத்தையும்; காலால் அழியும் மழை என்ன - காற்றினால் சிதறி அழியும் மழைத்தாரைகள் போல; எழுவால் - தன் கையில் கொண்ட எழு என்னும் ஆயுதத்தால்; அங்கும் இங்கும் - எல்லாப் புறங்களிலும்; அகல் வித்தான் - நழுவிச் சிதறிப் போகுமாறு நீக்குவித்தான். செய்தி செய்தி;அடுக்கு இகழ்ச்சிப் பொருளது. எய்த. எய்த; அடுக்கு விரைவுப் பொருளது. (45) |