பக்கம் எண் :

பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்587

5610.

வழங்குதேர்களின் இடிப்பொடு வாசியின் ஆர்ப்பும்,
முழங்கு வெங்களிற்று அதிர்ச்சியும், மொய் கழல்
                                    ஒலியும்,
தழங்குபல்லியத்து அமலையும், கடையுகத்து, ஆழி
முழங்கும்ஓதையின், மும் மடங்கு எழுந்தது முடுகி.

     வழங்குதேர்களின் இடிப்பொடு - விரைந்து செல்கின்றதேர்களின்
ஒலியும்; வாசியின் ஆர்ப்பும் - குதிரைகளின் கனைப்பு ஒலியும்; முழங்கு
வெம் களிற்று அதிர்ச்சியும் -
பிளிறுகின்ற கொடிய யானைகளின்
பேரொலியும்; மொய் கழல் ஒலியும் - (வீரர்கள் காலில்) கட்டிய
வீரக்கழல்களின் ஒலியும்; தழங்கு பல்லியத்து அமலையும் - ஒலிக்கும்
பலவாத்தியங்களின் பேரொலியும் (கூடி); கடை யுகத்து ஆழி முழங்கும்
ஓதையின் -
யுக முடிவுக் காலத்தில் கடல்கள் கொந்தளித்து ஒலிக்கின்ற
ஓசையை விட; மும் மடங்கு முடுகி எழுந்தது - மூன்று மடங்கு அதிகமாக
விரைந்து மேற்கிளம்பியது.

     ஒலி, தழங்கல்,அமலை, ஓதை என்பன ஒரு பொருள் குறிக்கும் பல
சொற்கள். ‘ஆறுபாய் அரவம்’, என்ற நாட்டுப் படலப் பாடலில் (கம்ப.34) ஒலி
குறித்துப் பல சொற்கள் ஒரு பொருள் குறித்து வந்தன; ஒப்பிட்டுச் சுவைக்கத்
தக்கன.                                                   (10)

5611.

ஆழித்தேர்த் தொகை ஐம்பதினாயிரம்; அஃதே
சூழிப்பூட்கைக்குத் தொகை; அவற்று இரட்டியின்
                                 தொகைய,
ஊழிக் காற்றுஅன்ன புரவி; மற்று அவற்றினுக்கு
                                இரட்டி,
பாழித் தோள்நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி.

     ஆழித் தேர்த்தொகை ஐம்பதினாயிரம் - சக்கரங்களைக் கொண்ட
தேர்களின் கணக்கு ஐம்பதினாயிரம் என்னும் அளவினதாம்; சூழிப்
பூட்கைக்குத் தொகை அஃதே -
முகபடாம் அணிந்த யானைகளின்
தொகையும் மேலே கூறிய தேர்களின் அளவேயாகும்; ஊழிக் காற்று அன்ன
புரவி -
யுகாந்த காலத்தில் தோன்றுகின்ற பெருங்காற்றுப் போல வேகமாகச்
செல்கின்ற குதிரைகள்; அவற்று இரட்டியின் தொகைய - அந்தத்
தேர்ப்படை, யானைப் படைகளைவிட இருமடங்கு தொகை உடையன; பாழித்
தோள் நெடும் படைக்கலப் பதாதியின் பகுதி -
பெரிய