பொருத அன்று இழந்தகோடு - மார்பினோடும் போர் புரிந்த அந்தக் காலத்தில் (திசை யானைகள்) இழந்தவையான கொம்புகளை; அரிந்து இடும் உறும் குழையர் - அறுத்து அவற்றைக் கொண்டு செய்த அழகு பொருந்திய காதணியை உடையவர்கள்; திசை நின்றவல் நெடும் களி யானையின் - (அன்றியும்) எட்டுத் திக்குகளிலும் தோற்றுநின்ற வலிய பெரிய செருக்குற்ற யானைகளின்; நெற்றி மின் திணிந்த அன ஓடையின் - நெற்றிகளில் அணிந்த மின்னல்கள் நெருங்கி நின்றாற் போன்ற (மிக்க ஒளியை உடைய) முகபடாத்தினால் இயன்ற; வீர பட்டத்தர் - வீரபட்டத்தை அணிந்தவர். பஞ்சசேனாபதிகளின் வீரச் சிறப்பை விளக்குவது. குழை - காதணி; யானையின் தந்தங்களால் காதணி செய்வது வீரம். ‘நாக மருப்பின் இயன்றதோடும்’ (சீவக - 2440) திசை யானையின் நெற்றிப் பட்டத்தால் ஆன வீரபட்டம் நெற்றியில் அணிவதும் வீரர் மரபு. (19) கலி விருத்தம் | 5620. | நிதிநெடுங் கிழவனை நெருக்கி, நீள் நகர்ப் பதியொடும்பெருந் திருப் பறித்த பண்டை நாள், ‘விதி’ என,அன்னவன் வெந்நிட்டு ஓடவே, பொதியொடும்வாரிய பொலன் கொள் பூணினார். |
நெடு நிதிக்கிழவனை - (பஞ்ச சேனாபதிகள்)பெருஞ் செல்வத்துக்குரியவனான குபேரனை; நெருக்கி - போரில் தாக்கி; நீள் நகர் பதியொடும் - நீண்ட நகரமாகிய அளகா புரியொடும்; பெருந் திருப் பறித்த பண்டை நாள் - அவன் பெருஞ் செல்வத்தையும் கவர்ந்து கொண்ட முற்காலத்தில்; அன்னவன் - அந்தக் குபேரன் ! விதி என வெந்நிட்டு ஓடவே - ‘நம்; பண்டை வினை’ என்று சொல்லி புறமுதுகிட்டு ஓடியவுடன்; பொதியோடும் வாரிய - சுமைகளாக வாரிக் கொண்ட; பொலன் கொள் பூணினார் - பொன்னால் செய்யப்பட்ட அணிகலன்களை உடையவர்கள். (20) | 5621. | இந்திரன்இசை இழந்து ஏகுவான், இகல் தந்தி முன்கடாவினன் முடுக, தாம் அதன் மந்தர வால் அடிபிடித்து, ‘வல்லையேல் உந்துதி, இனி’என, வலிந்த ஊற்றத்தார். |
|