பக்கம் எண் :

பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்595

 

கொலைகளைநகும் நெடுங் கொலையர்; கொல்லன்
                                      ஊது
உலைகளை நகும்அனல் உமிழும் கண்ணினார்.

     மலைகளை நகும் தடமார்பர் - (அவர்கள்) மலைகளைஏளனம்
செய்யும் பரந்த மார்பை உடையவர்கள்; மால்கடல் அலைகளை நகும்
நெடும் தோளர் -
பெரிய கடலின் அலைகளைப் பழிக்கும் நீண்ட
தோள்களை உடையவர்கள்; அந்தகன் கொலைகளை நகும் நெடும்
கொலையர் -
யமனுடைய கொலைத் தொழிலைப் பழிக்கும் பெரும் கொலைத்
தொழிலை உடையவர்கள்; கொல்லன் ஊது உலைகளை நகும் அனல்
உமிழும் கண்ணினார் -
கொல்லன் (துருத்தி கொண்டு) ஊதும்
உலைக்களங்களைப் பார்த்து இகழ்ந்து (சிவப்பன போல) நெருப்பை கக்குகின்ற
கண்களை உடையவர்கள்.

     இந்த அரக்கவீரர்களுடைய மார்பு முதலியவை மலை முதலியவற்றினும்
விஞ்சியவை என்பது கூறப்பட்டது. விதிப்படி ஆயுள் முடிந்தோரை மட்டுமே
கூற்றுவன் கொல்வான்; இராவணனின் படைத்தலைவர்கள் எவரையும்
கொல்வர். ஆகையால், யமனுடைய கொலைத் தொழிலைப் பழிப்பவர் (ஏளனப்
படுத்துவோர்) ஆனார், பஞ்ச சேனாபதியர். தாடகை பற்றி இராமனிடம்
விசுவாமித்திரர் கூறியபோது, விதி முடிந்தது என்ற ஒரே தருமத்தை
நோக்குவான் ‘கூற்றுவன்; மூக்கில் ஓர் அயல் மணம் முகர்ந்தால் எதிர்ப்படும்
எதனையும் கொன்று தீர்ப்பாள் இவள். இவளைப் போல் உயிரினம் தின்னும்
ஒரு கூற்றும் (கம்ப. 380) உண்டோ என்று சொல்லிய கருத்து நினையத்தக்கது.
                                                      (23)

5624.

தோல்கிளர் திசைதொறும் உலகைச் சுற்றிய
சால் கிளர்முழங்கு எரி தழங்கி ஏறினும்,
கால் கிளர்ந்துஓங்கினும், காலம் கையுற
மால் கடல்கிளரினும், சரிக்கும் வன்மையார்.

     காலம் கை உற -யுக முடிவுநெருங்கிடும் போது; சால் கிளர்
முழங்கு எரி -
மிகுந்து கிளர்ந்து முழக்கம் செய்யும் ஊழிக் காலத்தீ;
உலகைச் சுற்றிய -
உலகம் முழுவதையும் (எரிக்கும்படி) சூழ்ந்து கொள்ளும்
பொருட்டு; தோல் கிளர் திசை தொறும் - யானைகள் விளங்கும் எட்டுத்
திக்குகளிலும்; தழங்கி ஏறினும் - பேரொலியோடு மேற்கிளம்பினும்; கால்
கிளர்ந்து ஓங்கினும் -
ஊழிக் காற்று மேற்கிளம்பி வீசினாலும்; மால் கடல்
கிளரினும் -