பக்கம் எண் :

596சுந்தர காண்டம்

பெருங்கடல்கள் ஒன்றுசேர்ந்து பொங்கி எழுந்தாலும்; சரிக்கும் வன்மை
யார் -
(அவற்றை யெல்லாம் சிறிதும் பொருட்படுத்தாமல்) இயங்குகின்ற
ஆற்றல் உடையவர்கள். (இவர்கள்).

      ‘தோல் - யானை, சரித்தல் - இயங்குதல்.                   (24)

அரக்கர் படையைஅனுமன் காணுதல் 

5625.

இவ் வகைஅனைவரும் எழுந்த தானையர்,
மொய் கிளர்தோரணம் அதனை முற்றினார்;
கையொடு கை உறஅணியும் கட்டினார்;
ஐயனும்,அவர்நிலை, அமைய நோக்கினான்.

     இவ்வகை அனைவரும்- இவ்வாறாக அந்தப் படைத் தலைவர்
ஐவரும்; எழுந்த தானையர் - மேல் நோக்கி எழுந்த சேனையை
உடையவராய்; மொய்கிளர் தோரணம் அதனை முற்றினார் - வலிமையால்
விளங்கும் தோரண வாயிலைச் சூழ்ந்து கொண்டு; கையொடு கை உற - ஒரு
பக்கத்தோடு மற்றொரு பக்கமும் பொருந்த; அணியும் கட்டினார் -
சேனைகளை அணிவகுத்து அமைத்தனர்; ஐயனும் அவர் நிலை அமைய
நோக்கினான் -
அனுமனும் அவர்களது போர் நிலையை நன்றாகப்
பார்த்தான்.                                                 (25)

5626.

அரக்கரதுஆற்றலும், அளவு இல் சேனையின்
தருக்கும், அம்மாருதி தனிமைத் தன்மையும்,
பொருக்கெனநோக்கிய புரந்தராதியர்,
இரக்கமும்,அவலமும், துளக்கும், எய்தினார்.

     அரக்கரதுஆற்றலும் - (அனுமனைச் சூழ்ந்துகொண்ட) பஞ்ச
சேனாபதிகளின் வலிமையையும்; அளவு இல் சேனையின் தருக்கும் -
அளவற்ற அந்தச் சேனையின் பெருமிதத்தையும்; அம்மாருதி தனிமைத்
தன்மையும் -
அந்த அனுமன் தனியாய் நிற்கும் நிலைமையையும்;
பொருக்கென நோக்கிய புரந்தராதியர் -
திடீரென்று பார்த்த இந்திரன்
முதலிய தேவர்கள்; இரக்கமும், அவலமும் துளக்கும் எய்தினார் -
(அனுமனிடத்துக்) கருணையும், துன்பமும் நடுக்கமும் (ஒருங்கே) அடைந்தனர்.