இந்திரன் முதலியதேவர்கள், பஞ்ச சேனாபதிகளின் ஆற்றலை நன்கு அறிந்தவர்கள். அதனால், சேனைகளின் நடுவில் தனித்து நிற்கும் அனுமனது நிலைக்கு, இரக்கமும் அவலமும் அடைந்தனர். (26) | 5627. | ‘இற்றனர்அரக்கர் இப் பகலுளே’ எனா, கற்று உணர்மாருதி களிக்கும் சிந்தையான், முற்றுறச் சுலாவியமுடிவு இல் தானையைச் சுற்றுற நோக்கி,தன் தோளை நோக்கினான். |
கற்று உணர்மாருதி - (பல நூல்களையும்) கற்றுத் தேர்ந்த அனுமான்; அரக்கர் இப் பகலுனே இற்றனர் எனா, களிக்கும் சிந்தையான் - இந்த அரக்கர்கள், இன்று ஒரு பகல் பொழுதுக்குள்ளே அழிவது உறுதி என்று எண்ணி மகிழ்கின்ற மனத்தினனாய்; முற்று உறச் சுலாவிய முடிவு இல் தானையை - (தன்னை) முழுவதும் சூழ்ந்து கொண்ட எல்லையற்ற அரக்கர்படைகளை; சுற்று உற நோக்கி - நான்கு பக்கத்திலும் நன்றாகப் பார்த்து; தன் தோளை நோக்கினான் - தனது தோள்களையும் பார்த்தான். (27) அனுமனைக் கண்டஅரக்க வீரரின் ஐயப்பாடு | 5628. | ‘புன் தலைக் குரங்கு இது போலுமால் அமர் வென்றது !விண்ணவர் புகழை வேரொடும் தின்ற வல்அரக்கரைத் திருகித் தின்றதால் !’ என்றனர்,அயிர்த்தனர், நிருதர் எண்ணிலார். |
எண் இலார்நிருதர் - (அங்கிருந்த)கணக்கில்லாத அரக்கர்கள்; புன் தலைக் குரங்கு இது போலும் - இழிவான தலையை உடைய குரங்கு இது தானோ; அமர் வென்றது - பெரிய போரில் வெற்றி கொண்டது; விண்ணவர் புகழை வேரொடும் தின்ற வல் அரக்கரை - தேவர் புகழை அடியோடு ஒழித்த வலிய அரக்கர்களை; திருகித் தின்றது - முறுக்கித் தின்றது ?; என்றனர் அயிர்த்தனர் - என்று ஐயம் கொண்டனர். போலும் என்றஒப்பில் போலியும் ஆல் என்ற அசையும் சேர்ந்து நின்று, நம்ப முடியாமையை உணர்த்தின. (28) அனுமன் பெரியவடிவம் கொள்ளலும், அரக்கர் சினந்து படை வழங்கலும் |