| 5629. | ஆயிடை,அனுமனும், அமரர்கோன் நகர் வாயில்நின்றுஅவ் வழிக் கொணர்ந்து வைத்த மாச் சேயொளித்தோரணத்து உம்பர், சேண் நெடு மீ உயர்விசும்பையும் கடக்க வீங்கினான். |
ஆ இடை -அப்பொழுது; அமரர் கோன் நகர் வாயில் நின்று - தேவர்தலைவனான இந்திரனது தலை நகராகிய அமராவதிப் பட்டணத்தின் வாசலிலிருந்து; அவ்வழிக் கொணர்ந்து வைத்த - அவ்விடத்து (அசோகவனம்) கொண்டு வந்து வைக்கப்பட்ட; மா சேய் ஒளித் தோரணத்து உம்பர் - மிக்க செந்நிறத்தை உடைய தோரணத்தின் மேலே; சேண் நெடு மீ உயர் விசும்பையும் - மிக நெடுந் தூரமாக மேலே உயர்ந்த ஆகாயத்தையும்; கடக்க வீங்கினான் - கடந்து செல்லுமாறு உருவத்தைப் பெரிதாக்கினான்; (29) | 5630. | வீங்கியவீரனை வியந்து நோக்கிய தீங்கு இயல்அரக்கரும், திருகினார் சினம், வாங்கியசிலையினர், வழங்கினார் படை; ஏங்கியசங்குஇனம்;இடித்த பேரியே ! |
வீங்கிய வீரனை- (அவ்வாறு) பெரு வடிவு கொண்ட வீரனான அனுமனை; வியந்து நோக்கிய - வியப்புடன் பார்த்த; தீங்கு இயல் அரக்கரும் - (பிறர்க்குத்) தீமை செய்தலையே தமக்கு இயல்பாகக் கொண்ட அரக்கர்களும்; சினம் திருகினார் - கோபம் மிகுந்து; வாங்கிய சிலையினர் - வில்லை வளைத்து; படை வழங்கினார் - (அனுமன் மீது) அம்புகளைச் செலுத்தினார்கள்; சங்கு இனம் ஏங்கிய - (அப்போது) சங்குகளின் கூட்டம் ஒலி செய்தன; பேரி இடித்த - முரசங்கள் பேரொலி செய்தன. வீரர்கட்குஉற்சாகம் மிகுதற் பொருட்டு, சங்கம் முதலியன முழக்குதல் மரபு. (30) | 5631. | எறிந்தனர், எய்தனர், எண் இறந்தன பொறிந்து எழுபடைக்கலம், அரக்கர் போக்கினார்; செறிந்தனமயிர்ப்புறம்; தினவு தீர்வுறச் சொறிந்தனர் எனஇருந்து, ஐயன் தூங்கினான். |
|