இரண்டு தேர்இரண்டு கைத் தலத்தும் ஏந்தி - இரண்டு தேர்களைத் தன்னிரு கைகளில் எடுத்து; வேறு இரண்டு மால் யானைபட்டு உருளஎற்றும் - (எதிர்வந்தது) வேறே இரண்டு பெரிய யானைகள் அழிந்து உருளுமாறு தாக்கினான்; கை இரண்டின் இரண்டு மால் யானை ஏந்தி - தன் இரு கைகளிலும் வேறு இரண்டு பெரியயானைகளை எடுத்து; இரண்டு பாலினும் வேறு வரும் பரியை எற்றும் - இரு பக்கங்களிலும் வேறு வந்த குதிரைகளை மோதி அடித்தான். தன்னை எதிர்க்கவந்த தேர்கள் முதலியவற்றைக் கொண்டே, பகைவரின் யானைகள் முதலியவற்றை அழித்து ஒழித்தான் அனுமன் என்பதாம். (35) | 5636. | மா இரு நெடுவரை வாங்கி, மண்ணில் இட்டு, ஆயிரம் தேர் படிஅரைக்குமால்; அழித்து, ஆயிரம் களிற்றைஓர் மரத்தினால் அடித்து, ‘ஏ’ எனும்மாத்திரத்து எற்றி முற்றுமால். |
மா இரு நெடுவரைவாங்கி - (மேலும் அனுமன்)பக்கத்தே உள்ள மிகப் பெரிய மலையை எடுத்து; (அதனைக் கொண்டு) ஆயிரம் தேர் பட மண்ணில் இட்டு அழித்து அரைக்கும் - ஆயிரந் தேர்கள் அழியும்படி, அவைகளைத் தரையில் வைத்து அரைப்பான்; ஏ எனும் மாத்திரத்து - இரண்டு மாத்திரைப் பொழுதிற்குள்; ஓர் மரத்தினால் - ஒரு மரத்தைக் கொண்டு; ஆயிரம் களிற்றை அடித்து எற்றி முற்றும் - ஆயிர யானைகளைஅடித்து (அவற்றை) மாயச் செய்வான். ‘ஏ’ யெனும் அளவுஇரண்டு, மாத்திரை நேரம்; கண் இமைக்கும் நேரம் ஒரு மாத்திரை. ‘ஏ’ நெடிலெழுத்து; ஆகையால் இரண்டு மாத்திரை (36) | 5637. | உதைக்கும்வெங் கரிகளை; உழக்கும் தேர்களை; மிதிக்கும் வன்புரவியை; தேய்க்கும் வீரரை; மதிக்கும் வல்எழுவினால்; அரைக்கும் மண்ணிடை; குதிக்கும் வன்தலையிடை; கடிக்கும்; குத்துமால். |
உதைக்கும் வெம்கரிகளை - (பகைவர் தன் மீது)செலுத்துகின்ற கொடிய யானைகளைக் காலில் உதைப்பான்; தேர்களை உழக்கும் - தேர்களைக் கலக்குவான்; வன் புரவியை |