மிதிக்கும் - வலிய குதிரைகளைக்காலால் மிதிப்பான்; வீரரைத் தேய்க்கும் - வீரர்களைத் தரையோடு சேர்த்துத் தேய்த்து விடுவான்; வல் எழுவினால் மண்ணிடை மதிக்கும் - (தான் கையில் கொண்ட) வலிய எழுவால் தரையிட்டுக் குழம்பாக்குவான்; வன் தலை இடைக் குதிக்கும் - (மேலும்) அவ்வரக்கரின் தலையிடத்தே குதிப்பான்; கடிக்கும், குத்தும் - அவர்களைக் கடிப்பான் குத்துவான். எழு - ஒருவகைப்போர்க் கருவி. மதிற்கதவில் குறுக்கே இடப்படும் கணையமரம் எனவும் கூறுவர். மதித்தல் - கடைவது போலக் குழப்புதல். (37) | 5638. | விசையின்மான் தேர்களும், களிறும் விட்டு, அகல் திசையும்ஆகாயமும் செறிய, சிந்துமால்; குசை கொள் பாய் பரியொடும், கொற்ற வேலொடும், பிசையுமால்அரக்கரை, பெருங் கரங்களால். |
விசையின் -(மேலும்அவ்வனுமன்) வேகமாக; மான் தேர்களும் களிறும் விட்டு - குதிரைகள் பூட்டப்பட்ட தேர்களையும் யானைகளையும் விட்டெறிந்து; அகல் திசையும் ஆகாயமும் செறியச் சிந்தும் - அகன்ற திக்குகளும் ஆகாசமும் போய் நிறையும் படி சிதறிவிழச் செய்வான்; குசை கொள் பாய் பரியொடும் - கடிவாளத்தைக் கொண்ட பாய்ந்து செல்லும் தன்மையுள்ள குதிரைகளுடனும்; கொற்ற வேயொடும் - (கையிற் பிடித்த) வெற்றி பொருந்திய வேலாயுதத்துடனும்; அரக்கரை - அந்த அரக்க வீரர்களை; பெரும் கரங்களால் - (தனது) பெரிய கைகளினால்; பிசையும் - பிசைந்து கொல்வான். மான் - குதிரை.குசை - கடிவாளம். (38) | 5639. | தீ உறுபொறியுடைச் செங் கண் வெங் கைமா, மீ உற, தடக்கையால் வீரன் வீசுதோறு, ஆய் பெருங்கொடியன, கடலின் ஆழ்வன, பாயுடை நெடுங்கலம் படுவ போன்றவே. |
உறு தீப் பொறிஉடை - மிக்க நெருப்புப் பொறிகளை உடைய; செங்கண் வெங்கை மா - சிவந்த கண்களைக் கொண்ட கொடிய யானைகளை; வீரன் தடக் கையால் மீ உற வீசு தோறு - அனுமன் தனது பெரிய கைகளைக் கொண்டு ஆகாயத்தின் மீது |