பக்கம் எண் :

பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்605

களினும்; மூரி வெம்கடல்புக கடிதின் முந்தின - வலிய கொடிய கடலில்
புக விரைந்தனவாய்; ஈர்ப்ப ஓடின - இழுக்கப்பட்டு ஓடின.

     ‘ஊரின்’ என்பதுவிரைவின் என்ற பொருளில் வந்துள்ளது அருகிய
வழக்கு.                                                    (43)

5644.

பிறைக்கடை எயிற்றின, பிலத்தின் வாயின,
கறைப் புனல்பொறிகளோடு உமிழும் கண்ணன,
உறைத் தபுபடையின, உதிர்ந்த யாக்கைகள்,
மறைத்தன, மகரதோரணத்தை, வான் உற.

     பிறைக்கடைஎயிற்றின - பிறையின் நுனி போன்றுவளைந்த பற்களை
உடையவனவும்; பிலத்தின் வாயின - குகைகளைப் போன்ற வாய்
உடையனவும்; கறைப் புனல் பொறிகளோடு உமிழும் கண்ணன -
கறைபடிந்த இரத்தமாகிய நீரை, நெருப்புப் பொறிகளோடு உமிழ்கின்ற கண்கள்
கொண்டனவும்; உறைதபு படையன - உறைகளினின்று நீக்கி எடுத்த
ஆயுதங்கள் பொத்துக் கொள்ளப் பெற்றனவுமான; உதிர்ந்த யாக்கைகள் -
உயிரொழிந்து கீழே விழுந்துள்ள பிணக் குவியல்கள்; வான் உற -
ஆகாயத்தை அளாவ; மகர தோரணத்தை மறைத்தன - (அனுமன் இருந்த)
மகரத்தின் வடிவத்தை அந்தத் தோரண வாயிலை மூடிவிட்டன.

     அனுமனால் இறந்தஅரக்கர்களின் மிகுதி கூறப்பட்டது. பிணங்கள்,
மிகுதியாகத் திரண்டிருந்ததனால் தோரண வாயில் மறைந்தது என்க.   (44)

5645.

குன்று உள;மரம் உள; குலம் கொள் பேர் எழு
ஒன்று அல, பலஉள; உயிர் உண்பான் உள;
அன்றினர் பலர்உளர்; ஐயன் கை உள;
பொன்றுவதுஅல்லது, புறத்துப் போவரோ ?

     குன்று உள -(அனுமன்எடுத்துத் தாக்குவதற்கு) மலைகள் உள்ளன;
மரம் உள -
மரங்களும் உள்ளன; குலம் கொள் பேர் எழு, ஒன்று அல
பல உள -
சிறப்புப் பொருந்திய பெரிய எழுக்களும் (என்ற இவை) பலவாக
உள்ளன; உயிர் உண்பான் உள - இப்படைகள் உண்பதற்கு உயிர்களும்
உள்ளன; அன்றினர் பலர் உளர் - சினந்து போர் செய்யுமாறு அரக்க வீரர்
பலரும் உள்ளனர்; ஐயன் கையினில் பொன்றுவது அல்லது -
(அப்பகைவர்கள்)