பக்கம் எண் :

606சுந்தர காண்டம்

அனுமன் கையால் இறந்துபடுவது அல்லாமல்; புறத்துப் போவரோ -
வெளியே தப்பிப் போவார்களோ ? (மாட்டார் என்றபடி)

    அந்த அரக்கர்வீரர் இறந்தொழிவதற்கு வேண்டியன யாவும்
நிரம்பியிருத்தலால் அவர்கள் யாவரும் இறந்தொழிவது அன்றி அவர்களுக்கு
வேறு வழி இல்லை என்று கூறப்பட்டது. அன்றினர் - பகைவர்        (45)

படைகள் முழுமையாகஅழிதல்

5646.

முழு முதல்,கண்ணுதல், முருகன் தாதை, கைம்
மழு எனப்பொலிந்து ஒளிர் வயிர வான் தனி
எழுவினின்,பொலங் கழல் அரக்கர் ஈண்டிய
குழுவினை, களம்படக் கொன்று நீக்கினான்.

     முழு முதல்கண்ணுதல் முருகன் தாதை - மும் மூர்த்திகளில்
சேர்ந்தவனாகிய, கண்ணை நெற்றியிலே கொண்ட, முருகக் கடவுளின்
தந்தையாகிய சிவபிரானது; கை மழு என - கையில் ஏந்திய மழுவாயுதம்
போல; பொலிந்து ஒளிர் - மிக்கு விளங்குகின்ற; வயிர வான் தனி எழு
வினின் -
உறுதியான் சிறந்த ஒப்பற்ற இரும்புத் தூணினால்; பொலன் கழல்
அரக்கர் ஈண்டிய குழு வினை -
அழகிய வீரக்கழல் அணிந்த
அரக்கருடைய நெருங்கிய கூட்டத்தை; களம் படக் கொன்று நீக்கினான் -
போர்க் களத்தில் இறந்த விழுமாறு கொன்று தொலைத்தான்.  (46)

தானை அழிந்தபின்சேனைத்தலைவர்
ஐவரும் அனுமனுடன்பொருது வீழ்தல்

5647.

உலந்ததுதானை; உவந்தனர் உம்பர்;
அலந்தலை உற்றது,அவ் ஆழி இலங்கை;
கலந்தது, அழும்குரலின் கடல் ஓதை;
வலம் தருதோளவர் ஐவரும் வந்தார்.

     தானை உலந்தது -சேனைமுழுவதும் அழிந்துவிட்டது; உம்பர்
உவந்தனர் -
(அதுகண்டு) தேவர்கள் மகிழ்வுற்றனர்; அவ் ஆழி இலங்கை
அலம் தலை உற்றது -
கடல் சூழ்ந்த அந்த இலங்கை நகரம் குழப்பம்
அடைந்தது; அழும் குரலின் கடல் ஓதை கலந்தது - இலங்கையிலுள்ளாரது
அழு குரலாகிய கடலோசை எங்கும்