பரவிற்று; வலம் தருதோளவர் ஐவரும் வந்தார் - (அப்போது) வலியைத் தரும் தோள்களை உடைய பஞ்ச சேனாபதிகளும் போர் புரிய எதிர்த்து வந்தனர். சேனைகளின்அழிவுக்குப் பிறகு, படைத்தலைவர் ஐவரும் அனுமனை எதிர்க்க வந்தனர் என்றவாறு. (47) | 5648. | ஈர்த்து எழுசெம்புனல் எக்கர் இழுக்க, தேர்த் துணை ஆழிஅழுந்தினர், சென்றார்; ஆர்த்தனர்;ஆயிரம் ஆயிரம் அம்பால் தூர்த்தனர்;அஞ்சனை தோன்றலும் நின்றான். |
ஈர்த்து எழுசெம்புனல் எக்கர் - (பிணக்குவியல்களை)இழுத்துக் கொண்டு செல்கின்ற இரத்த வெள்ளத்தினிடையே உள்ள மணல் திட்டுகள்; இழுக்க - உள்ளே இழுப்பதனால்; தேர்த்துணை ஆழி அழுந்தினர் சென்றார் - தம் தேர்களின் சக்கரங்களும் புதையவும் அரிதின் சென்ற பஞ்ச சேனாபதிகள்; ஆயிரம் ஆயிரம் அம்பால் தூர்த்தனர் - ஆயிரக்கணக்கான அம்புகளால் (அனுமன் உடலை) மூடி மறைத்தனர்; அஞ்சனை தோன்றலும் நின்றான் - அஞ்சனா தேவியின் மகனாகிய அனுமனும் அம்புமாரியுள் அஞ்சாது நின்றான். (48) | 5649. | எய்த கடுங்கணை யாவையும், எய்தா நொய்துஅகலும்படி, கைகளின் நூறா, பொய்து அகடுஒன்று பொருந்தி, நெடுந் தேர் செய்த கடும்பொறி ஒன்று, சிதைத்தான். |
எய்த கடும்கணையாவையும் எய்தா - (அந்தப் பஞ்சசேனாபதிகள்) எய்த கொடிய அம்புகள் எல்லாம் தன்னை வந்து அடையாமல்; நொய்து அகலும்படி கைகளின் நூறா - எளிதில் ஒழிந்து போம்படி (தன்) கைகளினால் தூளாக்கிவிட்டு; நெடுந்தேர் - (பிறகு, பஞ்ச சேனாபதிகளுள் ஒருவனது) பெரிய தேரிலே; பொய்து - துளைக்கப்பட்டு; அகடு ஒன்று பொருந்தி செய்து - நடுவில் நாட்டப்பட்டதாகிப் பொருந்தி செய்திருந்த; கடும் பொறி ஒன்று சிதைத்தான் - விரைந்து செல்வதற்குரிய இயந்திரம் ஒன்றை அழித்தான். |