பக்கம் எண் :

கடல் தாவு படலம்61

அலம்புதல் - கழுவுதல்.ஆழி வடிம்பு அலம்ப நின்றான் என்று நளவெண்பா
பேசும்.                                                (78)

4819.

பேழ்வாய்அகத்துஅலது பேர்உலகம் மூடும்
நீள்வான்அகத்தினிடை ஏகும்நெறி நேரா
ஆழ்வான்அணுக்கன் அவள்ஆழ்பில வயிற்றைப்
போழ்வான் நினைத்தினைய வாய்மொழி புகன்றான்:

     பேர்உலகம் மூடும்நீள்வான் அகத்தின் இடை - பெரிய உலகை
மூடுகின்ற நீண்ட ஆகாயத்தில்; பேழ்வாய் அகத்து அலது - (அரக்கியின்)
பிளந்த வாயே அல்லாமல்; ஏகும் நெறி நேரா ஆழ்வான் - செல்லும் வழி
கிடையாமல் துன்புற்ற ;அணுக்கன்- (இராமபிரானின்) அணுக்கத்
தொண்டனாகிய அனுமன்; அவள் ஆழ்பில வயிற்றைப் - அவள்
ஆழமானகுகைபோன்ற வயிற்றைப்; போழ்வான் - பிளப்பதற்கு;  
நினைத்து -
எண்ணி;இனைய வாய்மொழி - இப்படிப்பட்ட வார்த்தையை;
புகன்றான் -
கூறினான்.

     வானில் கடந்துசெல்வதற்கு அரக்கியின் வாயைத் தவிர வேறு இடம்
இன்மையால் துன்புற்ற அனுமன் அரக்கியின் வாயைப் பிளக்க எண்ணி இந்த
வார்த்தையைக் கூறினான்.                                      (79)

4820.

‘சாயா வரம்தழுவினாய் தழியபின்னும்
ஓயாஉயர்ந்தவிசை கண்டுமுணர் கில்லாய்
வாயால் அளந்துநெடு வான்வழி அடைத்தாய்
நீயாரை
? என்னைஇவண்நின்றநிலை’ என்றான்.

    சாயாவரம்தழுவினாய் - நிழலைப் பிடித்துஇழுக்கும் வரத்தால்
என்னை இழுத்தாய்; தழிய பின்னும் - இழுத்த பிறகும்; ஓயா உயர்ந்த விசை- தளர்ச்சி யடையாத வேகத்தை; கண்டும் - பார்த்தும்;
உணர்கில்லாய் -(என் வலிமையை) அறியாமலுள்ளாய்; நெடுவான் வழி -
பெரிய ஆகாயமார்க்கத்தை; வாயால் - வாயினால்; அளந்து அடைத்தாய்-
அளாவித்தடுத்தாய்; நீ யாரை - நீ யார்?;
இவண் நின்ற நிலைஎன்னை?
-
இவ்விடத்தேநிற்கின்ற நிலைமைக்குக்காரணம் யாது; என்றான் - என்று
வினவினான்.

    அரக்கியே !நிழலை இழுக்கும் வரத்தால் என்னை இழுத்தாய். யானே
அதற்கு அடங்காமல் செல்கிறேன். என் ஆற்றலை உணராமல் உள்ளாய். நீ
வான்வழி அடைத்து நிற்கும் காரணம் யாது என்று