பக்கம் எண் :

610சுந்தர காண்டம்

செய்தார் - அந்த கற்பாறையை,(தங்கள் ஆயுதங்களால்) பொடியாக உதிரச்
செய்தார்கள்.

     எறியப்பட்டமலையின் வேகத்தால் அதிலிருந்து நெருப்புப் பொறி
உண்டாயிற்று.                                               (53)

5654.

தொடுத்த,தொடுத்த, சரங்கள் துரந்த;
அடுத்து, அகன்மார்பின் அழுந்தி, அகன்ற;
மிடல்தொழிலான், விடு தேரொடு நொய்தின்
எடுத்து,ஒருவன்தனை, விண்ணில் எறிந்தான்.

     தொடுத்ததொடுத்த - மேன் மேலும்அந்நால்வர் பூட்டி வி்ட்ட;
சரங்கள் துரந்த -
அம்புகள் அங்கு நின்றும் வெளிப்பட்டனவாய்; அகல்
மார்பின் அடுத்து அழுத்தி அகன்ற -
(அனுமனது) அகன்ற மார்பில்
பொருந்தித் தைத்து அப்பாற் சென்றன; மிடல் தொழிலான் - (அப்போது)
வலிய போர்த்தொழிலை உடைய அனுமன்; ஒருவன் தனை - (அந்நால்வருள்)
ஒருவனை; விடு தேரொடு நொய்தின் எடுத்து - (அவன்) செலுத்திவந்த
தேரோடு எளிதாகத் தூக்கி; விண்ணில் எறிந்தான் - ஆகாயத்தில் வீசினான்.

     நால்வரின்ஒருவனைத் தேரோடு ஆகாயத்தில் அனுமன் வீசினன்
என்பதாம்.                                                  (54)

5655.

ஏய்ந்து எழுதேர் இமிழ் விண்ணினை எல்லாம்
நீந்தியது;
ஓடி நிமிர்ந்தது; வேகம்
ஓய்ந்தது;வீழ்வதன்முன், உயர் பாரில்
பாய்ந்தவன்மேல், உடன் மாருதி பாய்ந்தான்.

     ஏய்ந்து எழு தேர்- (அனுமனால்) எடுத்து எறியப்பட்டு மேல் எழுந்த
தேர்; இமிழ் விண்ணினை எல்லாம் - ஒலிக் குணம் உடைய ஆகாய வெளி
எங்கும்; ஓடி நீந்தியது - விரைந்து கடந்ததாகி; நிமிர்ந்தது வேகம் -
வேகத்தால் மிகுந்தது; ஓய்ந்தது - பின்னர் வேகம் குறைந்து போய்;
வீழ்வதன் முன் -
கீழே விழுவதற்கு முன்னமே; உயர் பாரில் பாய்ந்தவன்
மேல் -
சிறந்த பூமியில் பாய்ந்து குதித்த அவ்வரக்கர் தலைவன் மீது; உடன்
மாருதி பாய்ந்தான் -
உடனே அனுமன் பாய்ந்தான்.