பக்கம் எண் :

பஞ்ச சேனாபதிகள் வதைப் படலம்611

     எறியப்பட்டவேகத்திற்குத் தக்க வேகத்தில் தேர் பறந்தது என்பதை
‘ஏய்ந்து எழு தேர்’ எனக் குறித்தார்.                           (55)

5656.

மதித்தகளிற்றினில் வாள் அரிஏறு
கதித்ததுபாய்வதுபோல், கதி கொண்டு
குதித்தனன்;மால் வரை மேனி குழம்ப
மிதித்தனன்-வெஞ் சின வீரருள் வீரன்.

     வெம் சினவீரருள் வீரன் - கொடிய சினம் மிக்கவீரர்களுள் பெரு
வீரனாகிய அனுமன்; மதித்த களிற்றினில் - தருக்குற்ற யானையின் மீது;
வாள் அரி ஏறு கதித்தது பாய்வதுபோல - ஒளிதங்கிய ஆண்சிங்கம்
கோபம் கொண்டு பாய்வது போல; கதி கொண்டு குதித்தான் - விரைவாக
அவன்மீது குதித்து; மால் வரை மேனி குழம்ப மிதித்தான் - பெரிய மலை
போன்ற (அந்த அரக்கனுடைய) உடம்பு சிதைந்து இரத்தம் குழம்பும்படி
கால்களால் மிதித்துக் கொன்றான்.

      பஞ்சசேனாபதிகளுள் இரண்டாமவன் கொல்லப்பட்டான்.      (56)

5657.

மூண்டசினத்தவர் மூவர் முனிந்தார்;
தூண்டிய தேரர்,சரங்கள் துரந்தார்;
வேண்டிய வெஞ்சமம் வேறு விளைப்பார்,
‘யாண்டு இனிஏகுதி ?’ என்று, எதிர் சென்றார்.

     மூவர் மூண்டசினத்தவர் முனிந்தார் - மீதியிருந்த மூவர்மிகுந்த
கோபம் உள்ளவர்களாய் (அனுமனிடம்) வெறுப்புற்ற வராகி; தூண்டிய தேரர்
-
தமது தேர்களைச் செலுத்தியவர்களாய்; சரங்கள் துரந்தார் - (அனுமம்
மீது) அம்புகளைத் தொடுத்தனர்; வேண்டிய வெஞ்சமம் வேறு விளைப்பார்
-
(அவர்கள் மேலும்) தாம் விரும்பிய கொடிய போரை வேறு விதங்களிலும்
செய்யத் தொடங்கியவராய்; யாண்டு இனி ஏகுதி ? - இனி நீ எங்குத் தப்பிப்
போவாய் ?; என்ற எதிர் சென்றார் - என்று சொல்லிக் கொண்டே அனுமன்
முன் எதிர்த்துச் சென்றார்கள்.                                 (57)

5658.

திரண்டுஉயர் தோள் இணை அஞ்சனை சிங்கம்,
அரண் தரு விண்உறைவார்களும் அஞ்ச,
முரண் தரு தேர்அவை ஆண்டு ஒருமூன்றில்
இரண்டை இரண்டுகையின்கொடு எழுந்தான்.