திரண்டு உயர்தோள் இணை அஞ்சனை சிங்கம் - பருத்து உயர்ந்தஇரண்டு தோள்களை உடைய ஆஞ்சனேயன்; அரண் தரு விண் உறைவார்களும் அஞ்ச - காவலை உடைய தேவலோகத்தில் வாழ்பவரான தேவர்களும் அஞ்சும்படி; முரண் தருதேர் அவை ஒரு மூன்றில் - தன்னோடு மாறுபட்ட மூன்று தேர்களுக்குள்ளே; ஆண்டு - அப்போது; இரண்டை இரண்டு கையின் கொடு எழுந்தான் - தன் இரண்டு கைகளிலே இரண்டு தேர்களை எடுத்துக் கொண்டு மேலே கிளம்பினான். (58) | 5659. | தூங்கினபாய் பரி; சூதர் உலைந்தார்; வீங்கினதோளவர் விண்ணின் விசைத்தார்; ஆங்கு, அது கண்டு,அவர் போய் அகலாமுன், ஓங்கிய மாருதி,ஒல்லையின் உற்றான். |
பாய் பரிதூங்கின - (அனுமன் தேர்களைப்பற்றி மேலே எழும் போதுபூட்டியிருந்த) பாய்ந்தோடும் குதிரைகள் அந்தரத்தில் தொங்கின; சூதர் உலைந்தார் - தேரோட்டுவோர் அழிந்தார்; வீங்கின தோளவர் விண்ணில் விசைத்தார் - (அத்தேர்களிலிருந்த) பருத்த தோள்களை உடைய அவ்விரு தலைவர்களும் (அத்தேரினின்று) வான் வழியே விரைந்தனர்; ஆங்கு அது கண்டு - அப்போது அவர்கள் வானத்தில் செல்வதைக் கண்டு; அவர் போய் அகலாமுன் - அவர்கள் நீங்கித் தப்புவதற்கு முன்னம்; ஓங்கிய மாருதி - பெரு வடிவு படைத்த அனுமன்; ஒல்லையின் உற்றான் - விரைவில் (அவர்களைச் சென்று) கிட்டினான். தூங்குதல் -தொங்குதல்; ஒல்லை - விரைவு. (59) | 5660. | கால் நிமிர் வெஞ் சிலை கையின் இறுத்தான்; ஆனவர் தூணியும்,வாளும், அறுத்தான்; ஏனைய வெம் படைஇல்லவர், எஞ்சார், வானிடை நின்று,உயர் மல்லின் மலைந்தார். |
கால் நிமிர்வெஞ்சிலை கையின் இறுத்தான் - இருமுனைகளோடு ஓங்கிய கொடிய வில்லை (அனுமன்) தனது இரு கைகளால் ஒடித்து; ஆனவர் தூணியும் வாளும் அறுத்தான் - அவர்களுடைய அம்புப் புட்டில்களையும் வாள்களையும் சின்ன பின்னப்படுத்தினான்; ஏனைய வெம்படை இல்லவர் - வேறு, |