பக்கம் எண் :

612சுந்தர காண்டம்

     திரண்டு உயர்தோள் இணை அஞ்சனை சிங்கம் - பருத்து
உயர்ந்தஇரண்டு தோள்களை உடைய ஆஞ்சனேயன்; அரண் தரு விண்
உறைவார்களும் அஞ்ச -
காவலை உடைய தேவலோகத்தில் வாழ்பவரான
தேவர்களும் அஞ்சும்படி; முரண் தருதேர் அவை ஒரு மூன்றில் -
தன்னோடு மாறுபட்ட மூன்று தேர்களுக்குள்ளே; ஆண்டு - அப்போது;
இரண்டை இரண்டு கையின் கொடு எழுந்தான் - தன் இரண்டு கைகளிலே
இரண்டு தேர்களை எடுத்துக் கொண்டு மேலே கிளம்பினான்.          (58)

5659.

தூங்கினபாய் பரி; சூதர் உலைந்தார்;
வீங்கினதோளவர் விண்ணின் விசைத்தார்;
ஆங்கு, அது கண்டு,அவர் போய் அகலாமுன்,
ஓங்கிய மாருதி,ஒல்லையின் உற்றான்.

     பாய் பரிதூங்கின - (அனுமன் தேர்களைப்பற்றி மேலே எழும்
போதுபூட்டியிருந்த) பாய்ந்தோடும் குதிரைகள் அந்தரத்தில் தொங்கின; சூதர்
உலைந்தார் -
தேரோட்டுவோர் அழிந்தார்; வீங்கின தோளவர் விண்ணில்
விசைத்தார் -
(அத்தேர்களிலிருந்த) பருத்த தோள்களை உடைய அவ்விரு
தலைவர்களும் (அத்தேரினின்று) வான் வழியே விரைந்தனர்; ஆங்கு அது
கண்டு -
அப்போது அவர்கள் வானத்தில் செல்வதைக் கண்டு; அவர் போய்
அகலாமுன் -
அவர்கள் நீங்கித் தப்புவதற்கு முன்னம்; ஓங்கிய மாருதி -
பெரு வடிவு படைத்த அனுமன்; ஒல்லையின் உற்றான் - விரைவில்
(அவர்களைச் சென்று) கிட்டினான்.

     தூங்குதல் -தொங்குதல்; ஒல்லை - விரைவு.                (59)

5660.

கால் நிமிர் வெஞ் சிலை கையின் இறுத்தான்;
ஆனவர் தூணியும்,வாளும், அறுத்தான்;
ஏனைய வெம் படைஇல்லவர், எஞ்சார்,
வானிடை நின்று,உயர் மல்லின் மலைந்தார்.

     கால் நிமிர்வெஞ்சிலை கையின்  இறுத்தான் - இருமுனைகளோடு
ஓங்கிய கொடிய வில்லை (அனுமன்) தனது இரு கைகளால் ஒடித்து; ஆனவர்
தூணியும் வாளும் அறுத்தான் -
அவர்களுடைய அம்புப் புட்டில்களையும்
வாள்களையும் சின்ன பின்னப்படுத்தினான்; ஏனைய வெம்படை இல்லவர் -
வேறு,