சூழ்ந்தார் - எந்திரமுள்ளதேரின் மீது ஏறியவர்களாய், அக்க குமாரனைச் சூழ்ந்து கொண்டு போருக்குச் சென்றனர்.      அக்ககுமாரனுடன்சென்ற நான்கு லட்சம் வீரர்களின் வகை கூறப்பட்டது. மந்திரக் கிழவர் முதல்வராகக் கூறியவர் நால்வராதலால், ஒவ்வொருவகையினரின் குமாரரும் ஒவ்வொரு லட்சம் வீரர் என்க. அந்தரம் - மேலுலகம், விண்ணுலகம்.                                     (10) |         5678. | தோமரம்,உலக்கை, சூலம், சுடர் மழு, குலிசம்,                            தோட்டி,     ஏ மரு வரி வில்,வேல், கோல், ஈட்டி, வாள், எழு,                             விட்டேறு,     மா மரம், வீசுபாசம், எழு முளை, வயிரத் தண்டு,     காமரு கணையம்,குந்தம், கப்பணம், கால நேமி  |  
      தோமரம் -தண்டாயுதம்; உலக்கை, சூலம் - உலக்கைகள், திரி சூலங்கள்; சுடர் மழு, குலிசம் -  ஒளிவீசும் கோடாலிகள், வச்சிராயுதங்கள்; தோட்டி - அங்குசங்கள்; ஏமரு வரி வில் - அம்பு பொருந்திய கட்டமைந்த விற்கள்; வேல் கோல் - வேலாயுதங்கள் அம்புகள்; ஈட்டி, வாள் - எறியீட்டிகள், வாள்கள்; எழு, விட்டேறு - இரும்புத்தடிகள், எறிகோல்கள்; மாமரம் - பெரிய மரங்கள்; வீசு பாசம் - வீசுதற்குரிய கயிறுகள்; எழு முளைவயிரத் தண்டு - பகைவர் மேல் எழுகிற வயிரத்தாலான தண்டாயுதங்கள்; காமரு கணையம் குந்தம் - அழகு பொருந்தியவளைதடிகள் குத்துக் கோல்கள்; கப்பணம் - யானை நெருஞ்சி முட்கள்; காலநேமி - தவறாமல் கொல்லவல்ல சக்கராயுதங்கள்.....      அடுத்த பாடலுடன்முடியும். அரக்க வீரர்கள் கொண்டு சென்ற போர்க்கருவிகளின் வகைகள் கூறப்பட்டன.                        (11) |     5679. | என்று, இவைமுதல ஆய எறிதரு படைகள் ஈண்டி,     மின் திரண்டனையஆகி, வெயிலொடு நிலவு வீச,     துன்று இருந் தூளிபொங்கித் துறுதலால்,                               இறுதிசெல்லாப்     பொன் திணிஉலகம் எல்லாம், பூதலம் ஆய மாதோ !   |  
      என்று இவை முதலஆய - என்று சொல்லப்படுகின்ற இவை முதலாக உள்ள; எறிதரு படைகள் ஈண்டி - தாக்குதற்குரிய ஆயுதங்கள் நெருங்கியதனால்; மின் திரண்ட அனைய ஆகி -   |