பக்கம் எண் :

628சுந்தர காண்டம்

விரிகதிர் விழுங்க -உலகம்முழுவதும் பரவி விரிந்த சூரியனது ஒளியை
அடக்கவும்; வெய்ய அயில்கரம் - கொடிய வேலாயுதங்களினால்
தோன்றுகின்ற ஒளி; மணிகள் காலும் அவிர் ஒளி பருக - (ஆபரணங்களில்
இழைத்த) இரத்தினங்கள் வெளியிட்டு விளங்குகின்ற ஒளியை அடக்கவும்;
அஃகா எயிறு இளம்பிறை ஈன்ற இலங்கு ஒளி ஒதுங்க -
குறைவுபடாத
அரக்கர்களுடைய பற்களாகிய இளம் பிறைகள் உண்டாக்கிய விளங்கும்
ஒளியில் ஒதுங்கி மறையவும்; யாணர் உயிர்க்கு - (இவ்வாறு இருத்தலால்)
(பிறப்புத் தோறும்) புதிது, புதிதாகப் பிறக்கும் உயிர்க் கூட்டத்திற்கு; உலவு
இரவும் அன்று -
(இது உலகத்தில்) தோன்றுகின்ற இராக்காலமும் அல்ல;
பகல் அன்று என்று -
(அவ்வாறே உலகத்துத்தோன்றும்) பகலும் அல்ல
என்று; உணர்வு தோன்ற - ஓருணர்ச்சி உண்டாகவும்...

     ‘இடத்துத்துள்ள’என்று அடுத்த கவியோடு தொடரும். கரம் - ஒளி.
யாணர் - புதுமை. பிறப்புத் தோறும் புதுமை கொள்வதால் ’யாணர் உயிர்’
என்றார்.                                                (15)

5683.

ஓங்கு இருந்தடந் தேர் பூண்ட உளை வயப் புரவி
                           ஒல்கித்
தூங்கின வீழ,தோளும் கண்களும் இடத்துத் துள்ள,
வீங்கின மேகம்எங்கும் குருதி நீர்த் துள்ளி வீழ்ப்ப,
ஏங்கின காகம்ஆர்ப்ப, இருள் இல் விண் இடிப்ப
                           மாதோ;

     ஓங்குஇருந்தடந்தேர் பூண்ட - உயர்ந்த மிகப்பெரியதேர்களில்
கட்டப்பெற்ற; உளை வயப் புரவி - பிடரிமயிரை உடைய குதிரைகள்; ஒல்
கித்தூங்கின வீழ -
சோர்ந்து தூங்கி விழவும்; தோளும் கண்களும்
இடத்துத்துள்ள -
இராக்கதரது தோள்களும் கண்களும் இடப்பக்கத்துத்
துடிக்கவும்;வீங்கின மேகம் - மிக்குள்ள மேகங்கள்; எங்கும் குருதி நீர்த்
துள்ளிவீழ்ப்ப -
எவ்விடத்தும் இரத்தத் துளியைச் சொரியவும்; ஏங்கின
காகம்ஆர்ப்ப -
ஏங்கியிருந்த காகங்கள் (மகிழ்ச்சி கொண்டு)
ஆரவாரிக்கவும்;இருள் இல் விண் இடிப்ப - இருள் அடையாத
(நிர்மலமாயிருந்த) ஆகாயம்இடி முழங்குவது போல ஒலி உண்டாக்கவும்.