எண்ணிய -(நான்இப்போது போருக்கு வருபவராக) நினைத்த; இருவர்தம்முள் ஒருவனேல் - இந்திரசித்து, இராவணன் என்ற இருவர்களுள்ஒருவனாக இருந்தால்; யான் முன் செய்த புண்ணியம் உளது - யான்முற்பிறப்பில் செய்த புண்ணியப்பயன் எனக்கு உள்ளது; எம் கோன் தவத்தொடும் பொருந்தினானே - எங்கள் தலைவனான சுக்கிரீவனும் செய்த தவப்பயன் பொருந்தப் பெற்றவனானான்; நானும் நண்ணினன் நின்றேன் - (பல அரக்கர்களைக் கொன்றிட்ட) நானும் (இவனைக் கொல்வதற்கு) சித்தனாக நிற்கின்றேன்; காலனும் நணுகி நின்றான் - (இவன் உயிரைக் கொண்டு போவதற்கு) யமனும் நெருங்கி நிற்கின்றான்; கண்ணியகருமம் இன்றே கடிதின் முடிக்குவென் - யான் கருதிய காரியத்தை இன்றைக்கே விரைவில் முடித்து விடுவேன்; என்றான் - என்று (அனுமன்) தனக்குள் சொல்லிக் கொண்டான். (19) | 5687. | ‘பழி இலதுஉரு என்றாலும், பல் தலை அரக்கன் அல்லன்; விழிகள்ஆயிரமும் கொண்ட வேந்தை வென்றானும் அல்லன்; மொழியின், மற்று அவர்க்கு மேலான்; முரண் தொழில் முருகன் அல்லன்; அழிவு இல் ஒண்குமரன் யாரோ, அஞ்சனக் குன்றம் அன்னான் ?’ |
அஞ்சனக் குன்றம்அன்னான் - மைந் நீலமலை போலவிளங்குகின் றஇவன்; உருபழி இலது என்றாலும் - இவனுடைய வடிவம் குற்றம் அற்றதுஎன்றாலும்; பல் தலை அரக்கன் அல்லன் - பத்துத் தலைகளை உடையஅரக்கனாகிய இராவணன் அல்லன்; விழிகள் ஆயிரமும் கொண்ட வேந்தைவென்றானும் அல்லன் - ஆயிரம் கண்களைக் கொண்ட தேவேந்திரனைவென்ற இந்திரசித்தும் அல்லன்; மொழியின் - ஆராய்ந்து கூறுமிடத்து; மற்றுஅவர்க்கு மேலான் - மற்றைய அவர்களுக்கும் (இராவணன் மேகநாதன்)மேம்பட்டவனாகத் தோன்றுகின்றான்; முரண் தொழில் முருகன் அல்லன் -போர்த் தொழிலிற் சிறந்த முருகக் கடவுளும் அல்லன்; அழிவு இல் குமரன்யாரோ ? - கேடு என்பதே இல்லாத பராக்கிரமமுடைய இக் குமரன் யாரோ?. அனுமன் முன்பேஇராவணனையும் இந்திரசித்தையும் பார்த்தவன் [ஊர்தேடு படலம் (4974. 5040 - 5052 காண்க] ஆதலால் |