பக்கம் எண் :

632சுந்தர காண்டம்

வந்திருப்பவன்அவர்களில் ஒருவனல்லன் எனத் தெளிந்தான். போர்த்தொழில்
வல்லமையும் வெல்லும் திறனும் உடைய சேவகப் பெருமாளாகிய முருகனை
வீரர்க்கு உவமை சொல்வது மரபு; ‘கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி
உடம்பிடித் தடக்கை ஓடா வம்பலர்’ (பெரும்பாண் 75-76) எனவும், வென்றி
நெடுவேள் (குறுந். 111) எனவும் வந்தன. அறநெறியில் செல்லாத அரக்கர்
சார்பினனாக முருகன் வாரான் என்பதால் வருபவன் முருகன் அல்லன் எனத்
தெளிந்தான். விழிகள் ஆயிரம் கொண்ட இந்திரனை வென்றவன் மேகநாதன்;
இவ்வெற்றியால் இந்திரஜித் எனப் பெயர் பெற்றான். இராவணனுக்கும்
இந்திரசித்துக்கும் மேலான பெருவீரம் படைத்தவன்  அக்ககுமாரன் எனப்
பார்த்த அளவில் கணிக்கிறான் அனுமன்.                        (20)

அக்ககுமாரன்,அனுமனை இழித்துப்பேசிய
போதுதேர்ப்பாகன், ‘தகாது’ எனல்

5688.

என்றவன்,உவந்து, விண் தோய் இந்திர சாபம்
                          என்ன
நின்றதோரணத்தின் உம்பர் இருந்த ஓர் நீதியானை,
வன் தொழில்அரக்கன் நோக்கி, வாள் எயிறு
                          இலங்க நக்கான்;
‘கொன்றதுஇக்குரங்கு போலாம், அரக்கர்தம்
                         குழாத்தை !’ என்றான்.

     என்றவன் -என்றுஐயுற்றவனாகி; உவந்து - மகிழ்வுற்று; விண் தோய்
இந்திர சாபம் என்ன நின்ற தோரணத்தின் உம்பர் -
வானத்தில்
பொருந்திய இந்திர வில்லைப் போல பல நிறத்துடன் விளங்குவதான தோரண
வாயிலின் மீது; இருந்த ஓர் நீதி யானை - தங்கியிருந்த ஒப்பற்ற
நெறியுடையவனான அனுமனை;
வன் தொழில் அரக்கன்நோக்கி -
கொடுந்தொழிலையுடையஅக்ககுமாரன்பார்த்து; அரக்கர் குழாத்தைக்
கொன்றது இக் குரங்கு போலாம் என்றான்-
அரக்கர் கூட்டத்தை
எல்லாம் கொன்றது இந்தச் சிறு குரங்குதானா என்றுகூறி; வாள் எயிறு
இலங்க நக்கான் -
ஒளி தங்கிய தன் பற்கள் தோன்றுமாறுஏளனமாகச்
சிரித்தான்.

     அனுமனின் உவப்புக்குக்காரணம் நல்ல போருக்கு வாய்ப்பு
வரவிருப்பது குறித்து. அனுமன், அரக்கனை எண்ணியது முதல் பாட்டில்.
இங்கு, அரக்கன் அனுமனை எண்ணியது கூறப்பட்டது. இரண்டு
எண்ணங்களின் வேறுபாடு நோக்கத்தக்கது.                       (21)