சிலர் குறைகின்றார் -சிலஅரக்க வீரர்கள் இறந்தொழிந்தார்கள்; பலர் உடல் குலைகின்றார் - மற்றும் பல அரக்கர்கள் உடல் நடுக்குற்றனராய்; பின்றா நின்றனர் - பின்னிட்டுச் சென்றவராயினர்; உதிரப் பெருநிதி பெருகாநின்றன - இரத்த பேராறுகள் பெருகத் தலைப்பட்டன; அருகு நின்றார்ஆரும் நின்றிலர் - (அவ்வக்ககுமாரனுக்கு) அருகில் நின்றவர்கள் எவரும்அங்கே நிற்க மாட்டாமல் அப்புறம் சென்று விட்டனர்; தனி நின்றான் -(துணையின்றி) தனித்து நின்ற அக்ககுமாரனும்; ஒரு நேமித் தேரொடும் -ஒப்பற்ற சக்கரங்களை உடைய தேரோடும்; அவன் நேரே சென்றான் -அந்த அனுமனுக்கு எதிரே சென்றவனாகி; விழி எரி கின்றான் -(கோபத்தால்) கண்கள் நெருப்பு எரிவது போல் விளங்க; வன் திறல் அயில்வாய் அம்புகள் தெரிகின்றான் - மிக்க திறமை வாய்ந்த கூரிய முனைகளைஉடைய அம்புகளை அனுமன் மீது தேர்ந்து விடுகின்றவனானான். (31) | 5699. | உற்றான்இந்திரசித்துக்கு இளையவன்; ஒரு நாளேபலர் உயிர் உண்ணக் கற்றானும் முகம்எதிர் வைத்தான்; அது கண்டார்விண்ணவர்; கசிவுற்றார்; ‘எற்றாம் மாருதி நிலை ?’ என்பார்; இனி ‘இமையாவிழியினை இவை ஒன்றோ பெற்றாம்;நல்லது பெற்றாம்’ என்றனர்; பிறியாது எதிர் எதிர் செறிகின்றார். |
இந்திரசித்துக்கு இளையவன் உற்றான் - இந்திரசித்தனுக்குத் தம்பியாகிய அந்த அக்ககுமாரனும் (அனுமனுக்கு) எதிரே வந்தடைந்தான்; ஒரு நாளே பலர் உயிர் உண்ணக் கற்றானும் - ஒரு நாளிலேயே பல லட்சக்கணக்கான வீரர் உயிர்களை அழிக்கப் பழகியவனான அனுமனும்; முகம் எதிர் வைத்தான் - அவனுக்கு எதிர்முகமாய் நின்றான்; அது கண்டார் விண்ணவர் - அந்நிலையைக் கண்ட தேவர்கள்; கசிவு உற்றார் - மனம் இரங்கியவர்களாய்; மாருதி நிலை எற்றாம் - (இனி) அனுமனுடைய நிலை யாது ஆகுமோ; என்பார் - என்று மனத்தில் துணுக்குக் கொண்டு கூறுபவர்களாய்; இனி - இப்பொழுது; இமையா விழியினை இவை ஒன்றோ பெற்றாம் - இமையாக்கண்களை உடைமையாகிற இந்த ஒரு சிறப்பைப் பெற்றிருக்கின்ற நாங்கள்; |