ஒரு கையால் அவன்வயிரத் திண் சிலை உற்றுப் பற்றலும் - (அவ்வாறுஅனுமன் தனது) ஒரு கையினால், அக்ககுமாரனது உறுதியான வலிய வில்லை நெருங்கிப் பிடுங்கிக் கொண்டதும்; உரவோனும் - வலியவனான அக்ககுமாரனும்; இருகையால் வலியா முன்னம் - தனது இரண்டு கைகளாலும். அந்த வில்லைப் பிடித்து இழுக்கும் முன்னம்; அது இற்று ஓடியது - அவ்வில் முறிந்து போய் விட்டது (பிறகு); அவன் - அந்த அக்ககுமாரன்; இவர் பொன் தோளின் தன் கரிகையால் உருவி குத்தலும் -தன் உடை வாளினால், உயர்ந்த அழகிய (அனுமனது) தோளின் மேல் குத்தியதும்; அதனை - அந்த உடை வாளை; சொல்கொடு வரு தூதன் - (இராமபிரானது) சொல்லைச் சீதாபிராட்டியினிடம் சொல்லுமாறு கொண்டு வந்த தூதனாகிய அனுமன்; பொருகையால் பறியா - தனது போர் புரியும் கையினால் பறித்து; முதிர் பொறி ஓடும்படி இடை பிதிர்வித்தான் - மிக்க நெருப்புப் பொறி எங்கும் பறந்து செல்லும்படி (தன் மேல் படுவதற்கு முன்) நடுவழியிலேயே பொடியாக உதிரும்படிச் செய்தான். (35) அனுமனோடு மற்போர்செய்து அக்ககுமாரன் மடிதல் 5703. | வாளாலே பொரல் உற்றான், இற்று அது மண்சேராமுனம், வயிரத் திண் தோளாலே பொரமுடுகிப் புக்கு, இடை தழுவிக்கோடலும், உடல் முற்றும், நீள் ஆர் அயில்என மயிர் தைத்திட, மணி நெடு வால்அவன் உடல் நிமிர்வுற்று மீளாவகை, புடைசுற்றிக்கொண்டது; பற்றிக்கொண்டன் மேலானான். |
வாளாலே பொரல்உற்றான் - வாள் கொண்டு போர்புரியத் தொடங்கிய அக்ககுமாரன்; அது இற்று மண் சேரா முனம் - அந்த வாள் ஒடிந்து தரையில் விழுவதற்கு முன்னம்; வயிரத்திண் தோளாலே பொர முடுகி - மிக்க வலிய தனது தோளினாலேயே போர் புரிய வேகமாக வந்து; இடை புக்கு தழுவிக் கோடலும் - அவ்விடம் புகுந்து அனுமனைத் தழுவிக் கொள்ள முயன்றபோது; உடல் முற்றும் - அக்ககுமாரனது உடல் முழுவதும்; நீள் ஆர் அயில் என மயிர் தைத்திட - நீட்சி பொருந்திய வேலாயுதம் போல (அனுமனது) உரோமங்கள் குத்தி உட்புக; மணி நெடு வால் - |