| கண்டார் கண்டது ஓர் திசையே விசைகொடு கால்விட்டார்; படை கைவிட்டார். |
சிலர் புண்தாழ்குருதியின் வெள்ளத்து உயிர் கொடு புக்கார் - (உயிர்எஞ்சிய அரக்கரில்) சிலர், புண்களிலிருந்து பெருகுகின்ற இரத்த வெள்ளத்தினுள் உயிரோடு புகுந்து ஒளிந்து கொண்டனர்; சிலர் பேயின் பொதிபண்டாரத்திடைத் தம் உடல் இட்டார் - மற்றும் சிலர், பேய்களால் சேர்த்துவைக்கப்பட்ட பிணங்கள் நிறைந்த குவியலினிடத்து (போய்ப்புகுந்து) தமது உடலை இட்டு மறைத்துக் கொண்டனர்; சிலர், பயம் உந்த பட்டார் - வேறு சில அரக்கர்க்ள அச்சம் முன் பிடித்துத்தள்ள இறந்து ஒழிந்தனர்; சிலர், திண்டாடித் திசை அறியாமறுகினர், செற்றார் - மற்றும் சிலர், அலைக்கல்பட்டுத் திக்குத் தெரியாமல் கலங்கினவராய் வலியொடுங்கினார்கள்; சிலர் செலவு அற்றார் - வேறு சிலர், எங்கும் செல்லும் வலிமை அற்றவர்களானார்கள்; சிலர் படைகைவிட்டார் - வேறு சிலர் தம் கையிலிருந்த ஆயுதங்களை நழுவவிட்டவர்களாய்; கண்டார் கண்டது ஓர் திசையே - அவரவர் எதிரே கண்ட கண்ட திசை நோக்கியே; விசை கொடு கால் விட்டார் - வேகமாக ஓட்டம் பிடித்தனர். புறம் கொடுத்துஓடியவர்களின் செயலுள் சில கூறப்பட்டன. கைவிட்டார் கால் விட்டார் என்பன மரபுச் சொற்கள். (39) 5707. | மீன் ஆய்,வேலையை உற்றார் சிலர்; சிலர் பசு ஆய்வழிதொறும் மேய்வுற்றார்; ஊன் ஆர்பறவையின் வடிவு ஆனார் சிலர்; சிலர்நான்மறையவர் உரு ஆனார்; மான் ஆர் கண்இள மடவார் ஆயினர் முன்னே, தம் குழல் வகிர்வுற்றார் ஆனார் சிலர்;சிலர், ‘ஐயா ! நின் சரண்’ என்றார்;நின்றவர் ‘அரி’ என்றார். |
சிலர் மீன் ஆய்வேலையை உற்றார் - சில அரக்கர்கள் மீன் உருவம் கொண்டு கடலில் சேர்ந்தனர்; சிலர், பசு ஆய் வழிதொறும் மேய்வுற்றார் - சிலர் பசுவின் வடிவில் மாறி வழிகளில் எல்லாம் மேய்வாராயினர்; சிலர் ஊன் ஆர் பறவையின் வடிவு ஆனார் - சில அரக்கர்கள், மாமிசத்தைத்தின்னும் (கழுகு, காகம் முதலிய) பறவைகளின் வடிவை உடையவரானார்கள்; சிலர் நான் மறையவர் |