பக்கம் எண் :

648சுந்தர காண்டம்

உரு ஆனார் - வேறு சிலஅரக்கர்கள் நான்கு வேதங்களை ஓதும் அந்தணர்
உருவை எடுத்துக் கொண்டனர்; சிலர் - மற்றும் சில அரக்கர்கள்; மான் ஆர்
கண் இள மடவார் ஆயினர் -
மான்போன்ற கண்களை உடைய இளமகளிர்
உருவைப் பெற்றவராய்; தம் குழல் முன்னே வகிர்வு உற்றார் ஆனார் - தம்கூந்தலை முன்புறம் வகிடு எடுத்துக் கொண்டவர் ஆயினர்; சிலர், ‘ஐயா,
நின்சரண் என்றனர் -
வேறுசிலர், ‘ஐயனே ! யாம் உன் அடைக்கலம்
என்றார்கள்; நின்றவர் அரி என்றார் - மற்றுமுள்ளோர் அரி என்ற திருமால்
திருநாமத்தைக் கூறினர்.

     அனுமனுக்குஅஞ்சித் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில்
அரக்கர்கள் செய்த மாயச் செயல்கள் கூறப்பட்டன. அரி - குரங்கு என்றும்
பொருள் - குரங்கு என்றது அச்சத்தில் கூறியதாம் - அது திருமால் நாமமாகக்
கருதப்பட்டு உயிர் பெற்றார்.                                  (40)

5708.

தம்தாரமும், உறு கிளையும், தமை எதிர்
    தழுவும்தொறும், ‘நும தமர் அல்லேம்;
வந்தேம்,வானவர்’ என்று, ஏகினர் சிலர்;
     சிலர்,‘மானுயர்’ என, வாய் விட்டார்;
மந்தாரம் கிளர்பொழில்வாய் வண்டுகள்
     ஆனால்சிலர்; சிலர் மருள்கொண்டார்;
இந்து ஆர்எயிறுகள் இறுவித்தார் சிலர்;
     எரிபோல்குஞ்சியை இருள்வித்தார்.

     சிலர்,தம்தாரமும், உறு கிளையும் தமை எதிர் தழுவும் தொறும் -
சிலஅரக்கர்கள் தமது மனைவிகளும் நெருங்கிய உறவினர்களும் தம்மைக்
(கண்ட மகிழ்ச்சியால்) எதிர் வந்து தழுவிக் கொண்ட போதெல்லாம்; நுமதமர்
அல்லோம் -
யாங்கள் உமது சுற்றத்தினர் அல்லோம்; வானவர் வந்தோம்
-
நாங்கள் தேவர்கள், இப்போரைக் காண இங்கே வந்தோம்; என்று ஏகினர்
-
என்று சொல்லிவிட்டு அப்பால் சென்றனர்; சிலர், மானுயர் என வாய்
விட்டார் -
வேறு சிலர், நாங்கள்  மானிடர் (அரக்கர் அல்லர்) என்று
பெருங்கூக்குரலிட்டனர்; சிலர் - வேறு சிலர்; மந்தாரம் கிளர் பொழில்
வாய்வண்டுகள் ஆனார் -
மந்தார மரங்கள் விளங்கும் அந்தச்
சோலையினிடத்துவண்டுகளின் வடிவினை எடுத்துக் கொண்டார்; சிலர் மருள்
கொண்டார் -
இன்னும் சிலர், செய்வது இன்னதென்று அறியாமல் மயங்கி
நின்றனர்; சிலர்இந்து ஆர்