பக்கம் எண் :

கடல் தாவு படலம்65

     அரக்கிமாண்டாள் - அங்கார தாரைஇறந்தாள்; (அனுமன்)
அவள்வாய் - அவளுடைய வாயை; வயிறு காறும் கீண்டான் - வயிறுவரை
இரண்டாகப் பிளந்தான்; இமைப்பினிடை - கண் இமைப்பதற்கு முன்பு;
மேருகிரி கீழா நீண்டான் - மகா மேருமலை தன்கீழே இருக்கும்படி பேருருக்கொண்டான்; நினைப்பின் நெடிது என்ன- எண்ணத்தை விட
வேகம் என்றுகூறும்படி; வயக்கதி பூண்டான் - வேகமாகப் பறத்தலை
மேற்கொண்டான்;அருக்கன் உயர்வானின் வழி போனான் - சூரியன்
இயங்கும் உயர்ந்தவான வழியே சென்றான்.                   (86)

                         இராமநாமம்இடையூறு நீக்கும்

4827.

‘சொற்றார்கள் சொற்ற தொகையல்ல துணை ஒன்றோ
முற்றா முடிந்தநெடுவானினிடை முந்நீ
ரில்தாவி எற்றுஎனினும் யான்இனி இலங்கை
உற்றால்,விலங்கும் இடையூறு’ என, உணர்ந்தான்.

     சொற்றார்கள் -வழியைக்கூறியவர்கள்; சொற்ற - கூறிய துன்பங்கள்;
தொகை அல்ல - எண்ணுக்கு உட்பட்டவை அல்ல; துணை ஒன்றோ -
அத்துன்பங்களை நீக்கும் துணை ஒன்றா (பல); நெடுவானின் இடை - பெரிய
ஆகாயத்தில் (அவைகள்); முற்றாமுடிந்த - அடியோடும் ஒழிந்துபோயின;
முந்நீரில் தாவி - கடலில் தாவிப்போய்; எற்று எனினும் - எத்தகைய
இடையூறு வந்தாலும்; யான்இனி - நான் இப்போது; இலங்கை உற்றால் -
இலங்கையை அடைந்தால்; இடையூறு விலங்கும் - இடையூறு விலகிப்
போகும்; என உணர்ந்தான் - (என்று அனுமான்) அறிந்தான்.

     வழி கூறியவானரர்கள் குறித்த துன்பங்கள் மிகப்பல. அவற்றை நீக்கும்
துணைகளும் பல. அத்துன்பங்கள் யாவும் ஒழிந்தன. யான் இலங்கை
அடைந்தால் துன்பம் முற்றும் நீங்கும் என்று அனுமன் கருதினான்.  (87)

4828.

ஊறுகடிதுஊறுவன ஊறில் அறம் உன்னா
தேறல்இல்அரக்கர்புரி தீமை அவைதீர
ஏறும்வகை எங்குளது? ‘இராம’என எல்லாம்
மாறும் அதின்மாறுபிறிதுஇல்’ என வலித்தான்.