பக்கம் எண் :

பாசப் படலம்661

ஐவர் - அழிவில்லாத பஞ்சசேனாபதிகளும்;  என்று இப்பைங்கழல்
அரக்கரோடும் -
என்று சொல்லப்படுகின்ற இந்தப் பசுமையான வீரக்கழல்
அணிந்த அரக்க வீரர்களுடன்; உடன்சென்ற பகுதிச்சேனை - கூடிச் சென்ற
சேனையின் பாகங்களில்; இங்கு ஒரு பேரும் மீண்டார் இல்லையேல் -
ஒருவரேனும் இங்குத் திரும்பி வந்தார் இல்லை என்றால்; குரங்கு அது
ஆமே ! -
அது குரங்கு என்று சொல்லத்தக்கதா ?; சங்கரன், அயன், மால்
என்பார் தாம் -
சிவபிரான், பிரமன், திருமால் என்று சொல்லப்படுகின்ற
மும்மூர்த்திகள் தாம்; எனும் தகையது - என்று கருதத்தகுவதாகும்.

     போருக்குச்சென்றவர் ஒருவரும் மீளவில்லை என்றால் எதிர்த்துப் போர்
செய்வது குரங்கா ? அன்று; மும்மூர்த்திகளின் சொரூபம் என்று கருத
வேண்டும் என்பது கருத்து.                                     (10)

5727.

‘திக்கயவலியும், மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற
முக்கணன்கைலையோடும் உலகு ஒரு மூன்றும்
                               வென்றாய்;
“அக்கனைக்கொன்று நின்ற குரங்கினை, ஆற்றல்
                                காண்டி;
புக்கு இனிவென்றும்” என்றால், புலம்பு அன்றி,
                     புலமைத்து ஆமோ ?

     திக்கய வலியும்- எட்டுத்திக்கு யானைகளின் வலிமையையும்;
மேல்நாள் திரிபுரம் தீயச் செற்ற முக்கணான் கயிலையோடும் -
முன்னொரு காலத்தில் முப்புரத்தையும் எரியும்படி அழித்திட்ட சிவபிரானது
கைலை மலையையும்; உலகு ஒரு மூன்றும் வென்றாய் - மூன்று
உலகங்களையும் வென்றவனாகிய நீ (இப்போது); அக்கனைக் கொன்று நின்ற
குரங்கினை -
அக்ககுமாரனைக் கொன்று (தான் உயிரோடு) நின்ற இந்தக்
குரங்கை; ஆற்றல் காண்டி - அதன் ஆற்றல் காண்பிக்குமாறு பார்த்துக்
கொண்டிருக்கிறாய் (விளையாடவிட்டு வேடிக்கை பார்க்கிறாய்); இனிப்புக்கு
வென்றும் என்றால் -
இவ்வளவு அழிவுக்குப் பின் நாம் போர்க்களம் சென்று
அதனை வெல்வோம் என்று சொன்னால்; புலம்பு அன்றி - அது
வீண்பிதற்றலே அல்லாமல்; புலமைத்து ஆமோ ? - அறிவுடைய
செயலாகுமோ (ஆகாது என்றபடி).