பக்கம் எண் :

பாசப் படலம்663

     பத்தியில்தேர்கள் செல்ல - வரிசையாக தேர்கள்செல்லவும்;
பவளக்கால் குடைகள் சுற்ற -
பவளத்தால் ஆகிய கால்களை உடைய
குடைகள்சூழ வரவும்; முத்தினின் சிவிகை தன்னை - முத்தாற் செய்யப்
பெற்றபல்லக்குகளை; முகில் எனத் தேர்கள் சுற்ற - மேகம் போலக் கரிய
மரத்தால் செய்யப்பெற்ற தேர்கள் சுற்றி வரவும்; மத்த வெங் கரிகள்
எல்லாம் -
மதம் உடைய கொடிய யானைகள் எல்லாம்; மழை என இருண்டு
தோன்ற -
மழை மேகம் போலக் கரிதாய்க் காட்சி அளிக்கவும்; தத்திய
பரிகள் தன்னின் -
தவழ்ந்து துள்ளும் குதிரைகளைப் போல; சாமரை
பதைப்ப -
வெண் கவரிகள் துடிக்க வந்தான்.                      (13)

5730.

சங்குகள்முழங்க, பேரி சகடைகள் இடியின் வீழ,
வெங் குரல்திமிலையோடு கடுவையின் மரங்கள்
                           வீங்க,
தொங்கலின்குழாமும் தூளி வெள்ளமும் விசும்பைத்
                           தூர்க்க,
திங்களின்குடைகள் பூப்ப, திசைக் களிறு இரிய,-
                           வந்தான்.*

     சங்குகள் முழங்க- சங்குகள் ஒலிக்கவும், பேரி சகடைகள் இடியின்
வீழ -
பெருமுரசு, டமாரம் ஆகிய வாத்தியங்கள் இடிபோல முழக்கமிடவும்;
வெங்குரல் திமிலையோடு கடுவையின் மரங்கள் வீங்க -
கொடிய ஒலியை
உடைய திமிலை, கடுவை என்னும் வாத்திய ஒலிகளால் மரங்கள் அதிரவும்;
தொங்கலின் குழாமும் -
மாலைக் கூட்டமும்; தூளி வெள்ளமும் - 
புழுதித்திரளும்; விசும்பைத் தூர்க்க - ஆகாயத்தை இல்லாதபடி
அடைக்கவும்;திங்களின் குடைகள் பூப்ப - சந்திரனைப் போல இடை
இடையே குடைகள்பொலிவுறத் தோன்றவும்; திசைக் களிறு இரிய - திக்கு
யானைகள் நடுங்கவும்;வந்தான் -வந்தான்.                      (14)

5731.

தீயினில்செவ்வே வைத்து, சின்னங்கள் வேறு வேறு
வாயினில் ஊதுவீரர் வழியிடம் பெறாது செல்ல,
தாயவள் சொல்மாறாது தவம் புரிந்து அறத்தின்
                          நின்ற
நாயகன் தூதன்தானும், நோக்கினன்;
நகையும்
                         கொண்டான்.*