பக்கம் எண் :

664சுந்தர காண்டம்

     தீயினில் -நெருப்பைப்போல; செவ்வே வைத்து - நன்றாகப்
பொருத்தி வைத்து; வேறு வேறு சின்னங்கள் - வெவ்வேறான ஊது
கொம்புகளை; வாயினில் ஊதுவீரர் - வாயில் வைத்து ஊதுகின்ற வீரர்கள்;
வழியிடம் பெறாது செல்ல -
செல்லுதற்கு வழி கிடைக்காமல் அரிதின்
செல்ல (இக்காட்சியை); தாயவள் சொல் மறாது தவம் புரிந்து அறத்தின்
நின்ற நாயகன் தூதன் தானும் -
தன் தாயான கைகேயி சொன்ன சொல்லை
மறுக்காமல் தவம் செய்து துறவறத்தில் நின்ற இராமபிரானது தூதனாகிய
அனுமானும்; நோக்கினன் - கண்ணாலும் கருத்தாலும் பார்த்தான்; நகையும்
கொண்டான் -
(போர் மிகக் கிடைக்க இருக்கிறது என்பதனால்) சிரிப்பும்
கொண்டான்.

     சின்னம் - ஊதுகொம்புகள். திருச்சின்னம் என்று கூறுவது வழக்கு.
இவற்றின் ஒலி கேட்போர் காதில் தீப்போலப் பாய்கிறது எனலும் ஒன்று. “தாழ்
இரும் சடைகள் தாங்கித் தாங்க அரும் தவம் மேற்கொண்டு” (கம்ப. 1601)
என்பது தாய் கூறிய வார்த்தை ஆதலின் அதனை மேற்கொண்டு தவம் புரிந்து
அறத்தின் நின்ற நாயகன் இராமன் ஆனான். போர் பெற்றால் வீரர் மகிழ்வர்.
இந்திர சித்துவின் போர் ஆரவாரப் புறப்பாடு கண்ட அனுமனுக்கு அது
மகிழ்ச்சியை உண்டாக்கி நகையைத் தோற்றுவித்தது. தான் - உரையசை.                                               (15)

5732.

செம்பொனின் தேரின் பாங்கர்ச் செங்குடைத்
                            தொங்கற் காடும்,
உம்பரின்கொம்பர் ஒத்த, ஒரு பிடி நுசுப்பின், செவ்
                            வாய்,
வம்பு அவிழ்குழலினார்கள் சாமரை பதைத்து வீச,
கொம்பொடும்கோடு தாரை குடர் பறித்து ஊத
                            வந்தான்.*

     செம்பொனின்தேரின் பாங்கர்ச் - செம்பொன்னால் ஆகியதேரின்
பக்கத்தில்; செங்குடைத் தொங்கற்காடும் - சிவந்த குடைமாலைகளின்
கூட்டமும் (அதனைச் சார்ந்து); உம்பரின் கொம்பர் ஒத்த - தேவர்
உலகத்துக் கற்பகக் கொம்பினை ஒத்த; ஒரு பிடி நுசுப்பின் - ஒப்பற்ற
கைப்பிடி அளவே உள்ள இடையையும்; செவ்வாய் - சிவந்த வாயையும்;
வம்பு அவிழ் குழலினார்கள் -
மணம் விரியும் (மலரணிந்த) கூந்தலையும்
உடைய மகளிர்; சாமரை பதைத்து வீச - கவரிகளைக் கொண்டு துடிக்கும்படி
வீச; கொம்பு, கோடு, தாரை - கொம்பு முதலிய