| 5737. | தடுவையின் மரங்களோடு சகடைகள் திமிலை தாக்க, உடுஇனம் ஆனதுஎல்லாம் உதிர்ந்தன, பூ இது என்ன; அடு புலி அனையவீரர் அமரினில் ஆர்ப்பும், ஆனை நெடு மணிமுழக்கும்ஓதை மண்ணகம் நிறைந்தது அன்றே.* |
தடுவையின்மரங்கள், சகடைகள், திமிலை தாக்க - தடுவை மரம், சகடைப்பறை, திமிலைப்பறை ஆகிய வாத்தியங்கள் அடிக்கப்பெற அதனால்; பூ இது என்ன - மரங்களிலிருந்து பூ உதிர்தல் போல; உடு இனம் ஆனது எல்லாம் உதிர்ந்தன - நட்சத்திரங்கள் எல்லாம் கீழே விழுந்து விட்டன; அடுபுலி அனைய வீரர் அமரினில் ஆர்ப்பும் - கொல்லும் புலியை ஒத்த வீரர்கள் போரிடத்து ஆர்ப்பரித்ததனால் உண்டாகியதும்; ஆனை நெடுமணி முழக்கம் - யானைக் கழுத்தில் கட்டிவிடப்படும் நீண்ட மணி முழக்கினால் ஆகியதும் ஆகிய; ஓதை மண்ணகம் நிறைந்தது - ஒலிகள் மண்ணிடத்தே நிறைந்தது. தடுவைமரம் என்பதுஒருவகை வாத்திய விசேடம் - ஒலி அதிர்ச்சியால் விண்மீன் உதிர்ந்தன. ஆர்ப்பும், முழக்கும் ஆகிய ஓதை என்க. அன்று, ஏ அசைகள். (21) கலிவிருத்தம் | 5738. | எண்பதினாயிர கோடி இருஞ் சிலை புண் பயில் வெஞ்சரம் பூட்டினர், ஒன்றோ ? விண் புகுதோரணம் மெல்ல மறைந்த; மண் புகழ்சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான்.* |
எண்பதினாயிரகோடி இருஞ்சிலை - எண்பதாயிரகோடிக்கணக்கான விற்களை; புண்பயில் வெஞ்சரம் பூட்டினர் - புண்ணிற் பழகிய கொடிய அம்புகளைப் பூட்டியவர்களாய் விடத் தொடங்கினர்; ஒன்றோ - அம்மட்டோ; விண்புகு தோரணம் மெல்ல மறைந்த - வானைத் தீண்டும் தோரணமானது மெல்ல மறைந்து போயிற்று; மண்புகழ் சீர்த்தியன் மாருதி வாழ்ந்தான் - உலகு ஏத்தும் புகழாளனாகிய அனுமன் பெரும் போரால் வாழ்ந்தான் ஆயினன். தோரணவாயில்அனுமன் இருப்பிடம் ஆதலின் அதனை மறைத்த படைப் பெருக்கம், மாறாதிருக்கும் பெருந்தீனியாய் அமைவது |