பக்கம் எண் :

பாசப் படலம்669

என்பதால் ‘மாருதிவாழ்ந்தான்’ என்றார் போலும். ஒன்றோ - வியப்புச்சொல்.
                                                      (22)

5739.

பாறு எழுவாட் படை பத்திரு வெள்ளம்;
ஆறு இரு கோடியின்வேலின் அமைந்தார்;
கூறிடு வெள்ளம்மிடைந்தது குந்தம்;-
வீறுடைமாருதிமேல் வரு சேனை.*

     வீறு உடை மாருதிமேல் வரு சேனை - வீர பராக்கிரமம்உடைய
அனுமன் மேல் வருகின்ற சேனையின் அளவு; பாறு எழு வாட்படை பத்து
இரு வெள்ளம் -
போரிட எழுந்த வாள் படைகள் இருபது வெள்ளமாம்;
வேலின் அமைந்தார் - வேலாற் போர் செய்யும் படைஞர்; ஆறிரு கோடி
-
பன்னிரண்டு கோடியர் ஆகும்; குந்தம் மிடைந்தது - குந்தப் படையால்
போரிடுபவர்; கூறிடு வெள்ளம் - சொல்லப்படும் வெள்ளம் என்னும்
அளவினை உடையவராவர்.

     ‘வெள்ளம்’ என்பது தமிழில் பேரெண்ணைக் குறிக்கும் சொல்.    (23)

5740.

பந்து எனஆடிய பாய் பரி எல்லாம்;
சிந்தையின்முந்தின தேர்கள் செறிந்த;
அந்தியின்மேனிய ஆனைகள் எல்லாம்
வந்தன, மண்ணைஅடித் துகள் மாய்ப்ப.*

     பந்து என ஆடியபாய் பரி எல்லாம் - பந்து போலத் துள்ளிக்
குதித்தாடும் பாய்கின்ற குதிரைகளும்; செறிந்த சிந்தையின் முந்தின தேர்கள்- நெருங்கினவாகிய மனத்தினும் வேகமாகச் செல்லும் தேர்களும்;
அந்தியின்மேனிய ஆனைகள் எல்லாம் -
மாலைக்காலம் போல இருண்ட
கரியமேனியுடைய யானைகளும்; அடித்துகள் மண்ணை மாய்ப்ப வந்தன -
தம் பாதத்தூசி நிலவுலகத்தை மறைத்து இல்லாமல் செய்யும்படி வந்தன.  (24)

5741.

சங்கொடுதாரைகள், சச்சரி, சின்னம்,
எங்கும்இயம்பின; பேரி இடித்த;
வெங் குரலின்பறை விண்ணில் நிறைந்த;
பொங்கி அரக்கர் பொருக்கென வந்தார்.*