அனுமனைக் குறித்தது.‘நன்குணர் மாருதி’ (கம்ப. 4402) என்றதும் நோக்குக. (31) | 5748. | தூளி மிடைந்து, உருத் தோன்றல் ஆகி, யாளி அனானைஅறிந்திலன் ஆகி, சூழுறநோக்கினன், சோதனை பெற்றான்; கோள் அமைந்துஅன்னவை கூறுதலுற்றான்.* |
தூளி மிடைந்து -புழுதிமேலே நெருங்கி; உரு தோன்றல ஆகி - வடிவு பார்க்க முடியாமல்; யாளி அன்னானை - சிங்கம் போன்ற இந்திர சித்துவை; அறிந்திலன் ஆகி - கண்டறியாதவனாகி; சோதனை பெற்றான் - சோதித்து அறிதல் பெற்றானாய்ச்; சூழ் உற நோக்கினன் - சுற்றிலும் நன்றாகப் பார்த்தான்; கோள் அமைந்து - தன் எண்ணம் நிரம்பப் பெற்று; அன்னவை - அத்தன்மைகளை; கூறுதல் உற்றான் - சொல்லத் தொடங்கினான். படைப்பெருக்கத்தால் தூசி மிகுந்தது. இந்திரசித்துவை மறைத்தது. அதனால் அனுமன் காணாதவனாய்ச் சோதனையால் அறிந்தான் என்பதாகும். (32) | 5749. | இந்திரன்முன்பும் இடும் திரள் சோதிச் சந்திர வெண்குடை தான் எதிர் கண்டான்; அந்தம் இல்கேள்வியன் ஆனைகள் காணா, சிந்தை உவந்து,சிரித்து உடன் நின்றான்.* |
அந்தம் இல்கேள்வியன் - முடிவற்ற கேள்விஞானத்தில் நிரம்பப் பெற்றவன் ஆகிய அனுமன்; ஆனைகள் காணா - இந்திர சித்துவைக் காத்துச் சுற்றிலும் நிற்கும் ஆனைத்திரளைக் கண்டு; இந்திரன் முன்பும் இடும் திரள் சோதிச் சந்திர வெண்குடை தான் எதிர்கண்டான் - இந்திரனுக்கு முன்னால் இடப்படும் சந்திரமயமான வெண்குடையையும் எதிர்கண்டு; சிந்தை உவந்து - இந்திரசித்து இங்கேதான் உள்ளான் என்று மனம் மகிழ்ந்து; சிரித் துஉடன் நின்றான் - சிரித்து கூட நின்றான். இந்திரன் முன்புஇடும் சந்திர வெண்குடை அவனை வென்றமையால் இந்திரசித்துவுக்கு உரியதாயிற்று. சுற்றிலும் கரிய ஆனைத் திரளின் இடையில் சந்திர வெண்குடை கண்டு இந்திர சித்துவைக் கண்டு கொண்டான் அனுமன் என்க. (33) |